Tag Archives: ஆசிரியர்தெரிவு

அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரணை!

சிறிலங்காவின்  பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தாஜூடீன் படுகொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களிற்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டமாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சார்பில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார் நாரஹன்பிட்டி காவல் துறை  நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்பெரேரா,முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ...

Read More »

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவில்லை !

அரசியலமைப்பு பேரவை அரசியல் நோக்கிலே செயற்படுகின்றது. அதன் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவோ நீதியரசர்கள் தொடர்பான விளக்கமோ இல்லை. அவ்வாறான உறுப்பினர்களைக்கொண்ட பேரவை நீதிபதிகளின் நியமனம் தொடர்பில் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார். இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More »

இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் – இம்ரான்கான்

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக ...

Read More »

பிரிட்டன் பெண்ணுக்கு அவுஸ்ரேலியாவில் காத்திருந்த அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரித்தானிய பெண், தன்னுடைய பையில் ஒரு பாம்பு இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோய்ரா பெல்லால் என்கிற ஸ்காட்லாந்து பெண் தன்னுடைய கோடை விடுமுறையை கழிப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தன்னுடைய மருமகனுடைய வீட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடைய மருமகன் ஏர்லி மற்றும் அவரது மனைவி சாராவுடன் நாட்களை கழித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த பின்பு பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைக்கும் வேலையில் அவர் இருந்துள்ளார். அப்போது அவரது ...

Read More »

கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!

17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது 17 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதிகள்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. தங்களின் கோரிக்கைகளுக்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால்,  ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட ...

Read More »

மைத்திரிகொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையான மெர்சாலின் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவல் துறை  மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறிலங்கா  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும்  சதித்தத் திட்டம் தொடர்பாக ...

Read More »

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக ...

Read More »

19 ஆவது திருத்தம் தொடர்பில் ரணில் கூறுவது பொய்!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாகவே முக்கிய ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்படுகின்றது என சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது ஒரு அரசியல் பிரச்சாரமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் இன்று  கேள்விக் குறியாக்கப்படுவதற்கு பிரதான காரணம் சபாநாயகரின் பொறுப்பற்ற  தன்மையும், ஒரு தலைபட்சமான  செயற்பாடுகளுமே. கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தொடர்பிலான விசாரணைகளை  புலனாய்வு  பிரிவினரும், காவல் துறை தரப்பினரும் மேற்கொள்ளவில்லை. நெருக்கடியான காலக்கட்டங்களிலும்    நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள்  பாதுகாக்கப்பட்டது. அரசாங்கம் இன்று நாட்டு ...

Read More »

பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம்!

பயங்கரவாத முகாம்களை அழித்ததையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால், இந்திய விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் ...

Read More »

அவுஸ்திரேலிய அழகி போட்டியில் தமிழ் பெண்!

அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் தமிழ் பெண் ஒருவர் அழகிப்போட்டியில் தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கியுள்ளார். பெனிட்டா சக்தி என்ற பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார். தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் தனியார் வங்கியில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அழகிப்போட்டியில் தேசிய அளவில் தெரிவாகியிருப்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளர். அந்த போட்டிக்காக முழு ஈடுபாட்டுடன் பெனிட்டா தன்னை தயார்படுத்தி வருகிறார். “என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இந்த ...

Read More »