அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவில்லை !

அரசியலமைப்பு பேரவை அரசியல் நோக்கிலே செயற்படுகின்றது. அதன் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவோ நீதியரசர்கள் தொடர்பான விளக்கமோ இல்லை.

அவ்வாறான உறுப்பினர்களைக்கொண்ட பேரவை நீதிபதிகளின் நியமனம் தொடர்பில் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.