Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிறிலங்கா காவல் துறை விடுக்கும் அவசர வேண்டுகோள் !

வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள காவல் துறை  நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்கள் அதனை காவல் துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ளகாவல் துறை நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறுகாவல் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னர் அவை தொடர்பில் அருகில் உள்ள காவல் துறை நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை ஊடகப் ...

Read More »

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது – டிலான் பெரேரா

காவல் துறை  விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சகல துறைகளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது என்பதை தெரிவித்துள்ள போதிலும்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனைக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளார். இதனால் எந்த பயனையும் நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து ...

Read More »

‘வாப்பாவின் பெயரைச் சொன்னால் காது, வாயை வாப்பா வெட்டுவார்’!

“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை காவல் துறை  மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரான் என்பவரின் நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான்கு வயதான அந்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மே 20ம் திகதி புதிய சட்டம்!

காவல் துறையிடம்  சிக்கும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் அந்த இடத்தில் வைத்தே ரத்துச் செய்யப்படும்வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது இந்த நடவடிக்கை பின்பற்றப்படும். எதிர்வரும் மே 20ம் திகதி இப்புதிய சட்டத்தின் பிரகாரம் நடைமுறைக்கு வரவுள்ளது. வாகன ஓட்டி ஒருவரை பரிசோதிக்கும் போது 0.05 என்ற அனுமதிக்கப்பட்ட blood alcohol concentration(BAC) அளவைவிடவும் சற்று அதிகமாக இருந்தால்கூட (low-range drink-drivers blood alcohol concentration of 0.05 to less ...

Read More »

கொச்சிக்கடையில் தாக்குதலை மேற்கொண்டவர் தேவாலயத்திற்கு எப்படி வந்தார் ?

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்  தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரின் வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக  இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர் இதன்போதே கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்ற விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தவேளை தாக்குதலிற்கு மறுநாள் கொச்சிக்கடையில் ...

Read More »

50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்!

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது. ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடையவில்லை. பொது மக்களின் பாதுகாப்பு இன்னும் ...

Read More »

அவுஸ்திரேலிய பிரதமரை முட்டையால் அடித்த பெண்ணுக்கு நீதிபதியின் உத்தரவு!

அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மீது முட்டையால் தாக்கிய பெண்ணுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்கள். தாக்குதல் நடத்திய 24 வயதான பெண் எதிர்வரும் மே 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி உத்தரவிட்டுள்ளது. கடும் நிபந்தனையுடன்கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் Scott Morrison   Albury பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அவருக்கு பின்புறமாக வந்த பெண்மணி அவரது தலையின் பின்புறமாக முட்டையால் தாக்குதல் நடத்தியிருந்தார். பிரதமரின் பாதுகாவலர்களால் உடனடியாகவே மடக்கிப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண்மணி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சோதனையிட்டபோது அவரது கைப்பையிலிருந்து ...

Read More »

தேசியத்தலைவர்பிரபாகரனின் பிறந்த தினம் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற்சித்திருந்தாா். எனினும் அப்போது காவல் துறை  அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு ...

Read More »

குண்டு தயா­ரித்த இன்­சாபின் ஊழி­யர்­க­ளுக்கு பிணை கிடைத்­தது எப்­படி?

சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் இன்சாப் அஹ­மட்­டுக்கு சொந்­த­மான, குண்டு தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் இடங்­களில் ஒன்­றான வெல்­லம்­பிட்டி செப்பு தொழிற்­சா­லையில் சேவை­யாற்­றிய நிலையில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஊழி­யர்கள் 9 பேருக்கு பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் காவல் துறை  தலை­மை­ய­கத்தின் எஸ்.ஐ.யூ. எனப்­படும் விஷேட விசா­ரணைப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. குறித்த ஒன்­பது பேரும்  வெல்­லம்­பிட்டி காவல் துறை  ஊடாக மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் போது ஏற்­பட்ட தவ­றுகள் அல்­லது சரி­யான முறையில் விட­யங்­களை ...

Read More »

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனடா சென்றார் ஆசியா பீவி!

மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி, நாட்டை விட்டு வெளியேறி கனடாவிற்கு சென்றுள்ளார். பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை ...

Read More »