அதிக வாசிப்பு

“ஒரு பறவைக்காக இரண்டு நாள் காத்திருந்தேன்!” திவ்யபாரதி

கேனான் 7 D மார்க் கேமரா, 150 – 600 லென்ஸ் அதோடு ட்ரைபேடு… இவையின்றி திவ்யபாரதி ராமமூர்த்தியைப் பார்க்க முடியாது. முதுகலை ஆங்கிலம் படித்தாலும், இவரின் முழு ஆர்வம் போட்டோகிராபி பக்கம்தான். பொழுதுபோக்கிற்காக படங்கள் எடுக்கத் தொடங்கியவர், ஒரு கட்டத்தில் அதை விட்டு விலகமுடியாதளவு நேசிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக, கானுயிர்ப் புகைப்படக்காரராக உலா வரும் திவ்யபாரதி, இயற்கை சார்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டுவருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்துடன் போட்டோகிராபி மற்றும் இயற்கையைக் காத்தல் குறித்து உரையாடும் திவ்யபாரதியிடம் பேசினேன். “கானுயிர் போட்டோகிராபி மீது ...

Read More »

அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர்தோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

அவுஸ்திரேலியாவில் 3 புதிய விசா பிரிவுகளை அவுஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் சமூகத்தினருக்கு பயன்தரும் வகையில் இந்த விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் சமூகத்தினர் நீண்டநாட்களாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்புதிய 3 வகை விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் David Coleman இதனை தெரிவித்துள்ளார். இம்மூன்று புதிய விசாக்களில் முதலாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக பெற்றோர் விசாவாகும். எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம். Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் ...

Read More »

சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்ரேலியா வரத்தடை!

உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி டேவிட் கோல்மேன் கூறுகையில், “உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்” என கூறினார். ...

Read More »

ஆஸி. வதிவிட உரிமைபெற்ற வெளிநாட்டவர்கள் தாய்நாடு சென்றபோது கைது?

அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றுக்கொண்ட 17 சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்டவர், சீன இரகசியப்படையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. தங்களது உறவினர்களை காண்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் பலரது மனைவிமார் மற்றும் குழந்தைகள் அவுஸ்திரேலிய குடியுரிமையுடைவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் நால்வர் வீட்டுக்காவலிலும் ஏனையோர் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது. சீன அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டும் Uighur சிறுபான்மை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன்!

அவுஸ்திரேலியாவில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு நேர்ந்த துயரம் குறிது தனது பெற்றோரிடம் கூறியதாகவும், ஆனால் அவர்களால் அதை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதாலையே இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள குனுன்நூரா பகுதியின் அருகாமையில் அந்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அச்சிறுவனின் குடியிருப்புகளை சுற்றி சண்டை சச்சரவுகளும், மதுவுக்கு அடிமையானவர்களுமே அதிகம் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இதனாலையே பல குடியிருப்புகளை ...

Read More »

நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன்!-நளினி

வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவன் முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் தமிழக ஆளுநருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 7 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உணவு சாப்பிட மறுத்துவிட்டார். நேற்று 3வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் பெண்கள் சிறையில் உள்ள ...

Read More »

அவுஸ்திரேலிய வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாநிலங்களில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை இந்த சட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த ...

Read More »

விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை!

வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடும் சவால்கள் நிறைந்திருந்த கடந்த 5 வருட காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், எனக்கு ஆதரவு நல்கிய நண்பர்கள், தோளோடு தோள் நின்று சேவையாற்றிய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், ஆலயத்தில் உள்ளேயிருந்த சுமார் முப்பது கடவுள் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் ஆலய சுவரில் JESUS என்று எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த18 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிட்னி Regent Park பகுதியில் அமைந்துள்ள பாரதிய மந்திர் ஆலயமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. முன்பு கிறிஸ்தவ தேவாலயமாக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மண்டபம் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்ட அகதிகள்!

நவுறு தடுப்பு முகாமிலுள்ள பல அகதிகளை இரகசியமாக அரசு, அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆளும் Morrison அரசு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த இரகசிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளாக கூறப்படுகிறது. நவுறு தீவில் உள்ள அகதிகளை நியூஸிலாந்து அரசு ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதனை அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை முதற்கட்டமாக ரகசியமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read More »