அதிக வாசிப்பு

தாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்களவருடன் முரண்பட்ட அரச அதிபர் நீக்கம்!

மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார். இதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்திருக்கும்போது அப்பகுதியில் சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், பாராளுமன்ற ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் வேறு நாடுகளுக்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

நவுருத்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 10 அகதிகள் அமெரிக்கா மற்றும் நார்வேவில் மீள்குடியமர்த்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 அகதிகள் அமெரிக்காவிலும் 1 அகதி நார்வேயிலும் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். அதே சமயம், நவுருதீவில் மேலும் 160 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 ஆண்டுகள் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பப்பு நியூ கினியா தீவிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடங்களிலும் பல அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கா- ஆஸ்திரேலியா ...

Read More »

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு………!

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.வின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மீளாய்வுக்காக அறிக்கை சமர்பித்துள்ள ஆமென்ஸ்டி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களும் அகதிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக ஆளாவதாக கவலைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களை குறிப்பாக படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை ...

Read More »

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து வந்திருந்தாலும், அத்தேர்தல்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக எம் மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டார்களா? பதிலானது இல்லை என்றுதான் கூற வல்ல தகமைகளை அவர்கள் கொண்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்தினால் முன்னகர்த்தப்பட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சுயநிர்ண உரிமையுடன் கூடிய சுயாட்சி வரைபை விட்ட இடத்தில் இருந்து தொடர்வதை விடுத்து, பல சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக ...

Read More »

மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார் பிரியா

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பிரியாவின் உடல்நிலை மோசமடைகின்றது இதன் காhரணமாக அவரை கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டுசெல்லக்கூடாது என மருத்துவர்கள் வாதிட்டுவந்த நிலையிலேயே அதிகாரிகள் அவரை பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாவை மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்லதிட்டமிட்டிருந்தனர்,ஆனால் அதற்கு சில மணிநேரத்துக்கு எல்லை காவல் படையினர் தலையிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விமானநிலையத்துக்கு ...

Read More »

சிட்னியில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை

ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார். இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். இவரது மனு ...

Read More »

யாழ்ப்பாணத்த்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் ஒரே நாளில் மரணம்

பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்திலேயே இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக ஒருவரும் மாரடைப்பால் மற்றவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற 58 வயதுடைய நபர் மாரடைப்பால் காலமானார். கடந்த 8ஆம் திகதி பூநகரியில் இடம்பெற்ற டிப்பருடனான விபத்தில் சிக்கிச் சிகிக்சை பெற்றுவந்த பிரியதர்சன் என்ற சுயேச்சைச்குழு 3 ...

Read More »

விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தடை

  இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக நியுஸ் இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. கரும்புலிகளின் பாணியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் உட்பட விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து ஐக்கியநாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாகஇலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான பயங்கரவாத விவகாரங்கள் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பெற்றோரின் சடலங்களை நடுக்கடலில் கைவிட்டு நீந்தி கரை சேர்ந்த இளைஞர்

அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார். தொடர்ந்து இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர் ...

Read More »

ஈழப் போரின் தாக்கம் சிட்னியில் வாழும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை!

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவரது உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு: கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய கொடிய இனவழிப்பின் நினைவு நாள் தொடர்பான எனது உரை தொடர்பாக கடுமையான மிகவும் அதிர்ச்சியாக இருக்ககூடிய செய்தி என்னவென்றால், இந்த கொடுமையான அச்சுறுத்தல்கள் அனைத்தும் ...

Read More »