செய்திமுரசு

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (16) தொடங்குகிறது. இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (16-ந்தேதி) தொடங்குகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் ராஞ்சியில் நடைபெறும் 3-வது ...

Read More »

காபூலில் கடத்தப்பட்ட அவுஸ்ரேலிய சமூக சேவகி விடுதலை

காபூலில் கடத்தப்பட்ட அவுஸ்ரேலிய சமூக சேவகி, ஐந்து மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சமூக சேவகி ஒருவர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த நிலையில் கடத்தப்பட்டு 5 மாதங்கள் கழிந்த நிலையில் நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை காபூல் நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் பஷீர் முஜாகித் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அவர் பாதுகாப்பாக திரும்பி வருவதை ...

Read More »

மலேசியாவில் இருந்து அவுஸ்ரேலியா சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் குழுவொன்று விஷேட விமானம் மூலம் இன்று(15) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி நிஹால் ரணசிங்க கூறினார். இன்று அதிகாலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016-10-31 அன்று விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்ற இவர்கள், அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் ...

Read More »

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹெட்போன் வெடித்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயனர் ஒருவிரன் ஹெட்போன் வெடித்து சிதறிய சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பீஜிங்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பேட்டரி மூலம் இயங்கும் ஹெட்போன் நடுவானில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பயணி ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஹெட்போன் வெடித்த சம்பவம் விமான பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணியின் ஹெட்போன் நடுவானில் வெடித்து சிதறியதில் பெண்மணியின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. வெடித்த ...

Read More »

இந்தியா – அவுஸ்ரேலியா தொடருக்கான ஆடுகளம் !

இந்தியா – அவுஸ்ரேலியா தொடருக்கான ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டதற்கு கங்குலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. புனே மைதானத்திற்கு இதுதான் முதல் டெஸ்ட். இதனால் ஆட்டம் ஐந்து நாட்கள் நீடிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் பந்து முதல் ஓவரில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு ...

Read More »

அவுஸ்ரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமந்திரனின் படுகொலை வழங்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மார்ச் 22 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார். மேலும், குறித்த படுகொலைச் சதியுடன் ...

Read More »

அவுஸ்ரேலியா உள்ளவர்கள் குடியேற்றப்பட்டவர்களே!

உலகில் உள்ள ஏழு கண்டங்களுள் ஒன்றக விளங்கும் சிறிய கண்டமாகக் காணப்படுவது அவுஸ்ரேலியா ஆகும். அதுமட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய தீவாகவும் காணப்படுகின்றது. எனினும் இங்கு வசிப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேற்றப்பட்டவர்கள் எனும் கருத்து நீண்ட காலமாக நிலவி வந்தது. இருந்த போதிலும் இதனை நிரூபிப்பதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது தலை முடியிலுள்ள DNA இனைக் கொண்டு குடியேற்றம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இக் குடியேற்றமானது சுமார் 50,000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு குழுவினரே குடியேற்றம் ...

Read More »

சிவப்பாக மாறிய ஏரி- மெல்போர்ன்

மெல்போர்ன் அருகே Westgate Park பகுதியில் அமைந்துள்ள உப்பு நீர் ஏரிதான் இவ்வாறு சிவப்பு நிறமாக மாறியுள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக மாறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மழையின் அளவு பெருமளவு குறைவதாலும் உப்பின் செறிவு மிக அதிகமாக இருப்பதாலும் குறித்த ஏரியில் தண்ணீர் பளபளக்கும் பிங்க் வண்ணத்திலோ அல்லது சிவப்பாகவோ மாறிவிடுகின்றன. மட்டுமின்றி இந்த ஏரியின் அடிப்பகுதியில் பரவிக்கிடக்கும் ஒருவகை ஆல்கேயானது இந்த மாயத்தை செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோடை காலத்தில் உப்பின் ...

Read More »

அண்ணா இருக்கேன் எதுக்கும் கவலைப்படாதே!

அவுஸ்ரேலியாவில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாத குழந்தைக்கு 3 வயதேயான அதன் சகோதரர் ஆதரவாக பேசிய பேச்சு அந்த குடும்பத்தினரை நெகிழச்செய்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஷெரைல் மற்றும் ஜோன் தம்பதிகள். இவர்களுக்கு வில்லியம்(3) மற்றும் தாமஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் 4 மாதங்களேயான தாமஸ் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெரும்பாலான நேரம் குழந்தை தாமசுடன் குடும்பத்தினர் அனைவரும் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு குழந்தையுடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர் ஷெரைல் ...

Read More »

சம்பந்தன் – சுமந்திரனின் துரோகம்!

சுமந்திரன் ஜெனீவா சென்று இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகளைச் செய்துவிட்டு அதனை ஜனநாயகரீதியில் தாங்கள் முடிவெடுத்ததாக காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகமே நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (12) ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட அவர் தெரிவித்ததாவது, ஏற்கனவே ஒன்றரைவருடகால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காணாமல் போனவர்கள்தொடர்பாக இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை. தொடர்ச்சியாக மனித ...

Read More »