மலேசியாவில் இருந்து அவுஸ்ரேலியா சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் குழுவொன்று விஷேட விமானம் மூலம் இன்று(15) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி நிஹால் ரணசிங்க கூறினார்.

இன்று அதிகாலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-10-31 அன்று விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்ற இவர்கள், அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு சென்றிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மெலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.