செய்திமுரசு

வெள்ளத்தில் மிதக்கும் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன. பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று அவுஸ்ரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை கொட்டி இருக்கிறது. இதனால் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் வெள்ளக்காடாக ...

Read More »

சந்தியா என்னெலிகொடவுக்கு விருது வழங்கினார் ட்ரம்பின் மனைவி!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 2017 ஆம் ஆண்டுக்கான “உலகில் துணிச்சலான பெண்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலானியா டிரம்பினால் நேற்று வொஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இவரைப் போன்று உலக அளவில் காணப்படும் 13 பெண்கள் இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது. தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் ...

Read More »

அவுஸ்ரேலியா செல்ல அனுமதி கோரும் திஸ்ஸ!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல கொழும்புமேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். அடுத்த மாதம் 19ம் திகதி முதல்,28ம் திகதி வரையில் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிதருமாறு திஸ்ஸ அத்த நாயக்க கோரியுள்ளார். இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அடுத்தமாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பில் திஸ்ஸவுக்குஎதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அவுஸ்ரேலியாவில் 270 மீட்டர் வேகத்தில் வீசிய புயல்

அவுஸ்ரேலியாவில் 270 கி.மீட்டர் வேகத்தில் டெப்பி புயல் வீசியதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவுஸ்ரேலியாவில் பசிபிக் கடலில் ‘டெப்பி’ என பெயரிடப்பட்ட கடும் புயல் உருவானது. அப்புயல் நேற்று முன்தினம் குவின்ஸ்லாந்தில் போவன்- ஏர்லி கடற்கரை இடையே கரையை கடந்தது. இதனால் மணிக்கு 273 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடுமையான சூறாவளி வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான ...

Read More »

வலி.வடக்கு காணிகளை விற்பனை செய்ய இராணுவம் நிர்ப்பந்தம்!

வலி.வடக்கினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை தம்மிடம் விற்பனை செய்யவேண்டும் அல்லது மேலும் நான்கு வருடங்களிற்கு வாடகைக்கு தரவேண்டுமென இலங்கை இராணுவம் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இடம்பெயர்ந்த நிலையினில் உறவினர் நண்பர்களது வீடுகளினில் வாழ்ந்து வரும் குடும்பங்களையே நேரினில் தேடிச்செல்லும் இராணுவ அதிகாரிகள் நிர்ப்பந்தித்துவருகின்றனர்.அவ்வாறு விற்பனை செய்யவிருப்பமில்லாவிடின் வாடகை ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு படைத்தரப்பிற்கு நான்கு வருட காலத்திற்கு வாடகைக்கு தரவேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. கடந்த 30வருடங்களிற்கு மேலாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்து உதவுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மைத்திரியிடம் விண்ணப்பித்தவர்களிற்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையினில் யாழ்ப்பாணத்திற்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மருத்துவரை சந்திக்கும் போது…..

உடல் நிலை சரியில்லை என்றால் ஒவ்வொருவரும் நாடுவது அவர்களின் குடும்ப வைத்தியரை. ஆஸ்திரேலியாவில் குடும்ப வைத்தியர் GP என்று அழைக்கப்படுவர். அவுஸ்ரேலிய  குடியுரிமை உடையவர்கள், நிரந்திர வதிவிட உரிமை கொண்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் குடும்ப வைத்தியர் மற்றும் நிபுணர்களிடம் இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவ ஆலோசனை பெறலாம். பல்வேறு விதமான உடல் நல, மனநல பிரச்சனைகளுக்காக நீங்கள் குடும்ப வைத்தியரை அணுகலாம். குடும்ப வைத்தியரிடம் கட்டணம் செலுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற நீங்கள் Medicare அட்டை வைத்திருக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியை தாக்கிய ‘டெப்பி’ புயல்

அவுஸ்ரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. அவுஸ்ரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3-வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல ...

Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் சென்ற பாம்பு!

அவுஸ்ரேலியாவில் பலவகையான பாம்புகள் காணப்படும் நிலையில், நமது அண்டைநாடான நியூசிலாந்து மக்கள் பாம்புகளின் தொல்லையின்றி வாழ்கிறார்கள். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்னிலிருந்து நியூசிலாந்துக்கு brown tree வகை பாம்பொன்று தனியார் சொகுசு விமானத்தில் பறந்து சென்றிருக்கிறது. பிரிஸ்பேர்னில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் சில்லு வழியாக உள்ளே சென்ற பாம்பு, Auckland விமானநிலையத்தைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதை அவதானித்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பாம்பை அப்புறப்படுத்தினர். இதேவேளை குறித்த பாம்பு பலவீனமான நிலையில் இருந்ததாகவும், விலங்குவாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் கொலை செய்யப்படவுள்ளதாகவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவை மிரட்டும் புயல்!

அவுஸ்ரேலியாவை புயல் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், அந்நாட்டின் வடக்கு பகுதியான குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குவின்ஸ்லாந்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 140 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் உட்பட குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியேறுவதற்காக ரெயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) புயல் வீசும் என்று எச்சரிக்கை ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்!

தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக ...

Read More »