அவுஸ்ரேலியா செல்ல அனுமதி கோரும் திஸ்ஸ!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல கொழும்புமேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.

அடுத்த மாதம் 19ம் திகதி முதல்,28ம் திகதி வரையில் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிதருமாறு திஸ்ஸ அத்த நாயக்க கோரியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அடுத்தமாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பில் திஸ்ஸவுக்குஎதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.