செய்திமுரசு

இலங்கையின் மாணவர்களுக்கு செய்யும் அவுஸ்திரேலியாவின் La Trobe Business School

இலங்கை/நேபாள/இந்திய மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகத்தின் La Trobe Business School இன் தலைமை அதிகாரி பேராசிரியர் போல் மாதர் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தூதுக்குழுவினர் கொழும்பு, காத்மண்டு, மற்றும் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். சார்க் நாடுகள் மற்றும் இலங்கை ஆகிய பிரதேசங்களின் மாணவர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பைத் தொடர்ந்து, La Trobe Business School இனால் புதிய ஆட்சேர்ப்பு செயற்பாடுகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி மற்றும் ஜுலை மாதத்தில் இரு செமிஸ்டர்கள் ஆரம்பமாகவுள்ளன. La Trobe ...

Read More »

கைதான முன்னாள் போராளிகளிற்கு விளக்கமறியல்!

முல்லைதீவில் இருந்து மட்டு நகருக்கு ஆயுதங்களை கடத்த முற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் நால்வர் கைதாகியுள்ளனர். நீதிமன்றினில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முல்லைதீவில் இருந்து மட்டக்களப்பிற்கு சில ஆயுதங்களை பேருந்தில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை ...

Read More »

புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்! – அவுஸ்ரேலிய அமைச்சரிடம் கோரிக்கை

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளிற்கான அமைச்சரிடம் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருடன் முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இந்த கலந்துரையாடலின் போது, வடமாகாணத்தின் அபிவிருத்தி ...

Read More »

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2017 – மெல்பேர்ண்

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும். அவுஸ்திரேலியாவில் தமிழ்த் ...

Read More »

மணப்பெண் கிடைக்காததால் ரோபோட்டை திருமணம் செய்த சீன வாலிபர்

சீனாவில் மணப்பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்தது. அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இப்படி ...

Read More »

டிரம்ப் மனைவி புகைப்படம் : அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படம் தொடர்பாக, அந்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 70, மனைவி மெலனியா டிரம்பிற்கு, 46, அமெரிக்க அரசில், ‘முதல் குடிமகள்’ என்ற அரசு முறை அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, மெலனியா டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை, அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக வெளியிட்டது. இதில், முன்னாள் மாடல் அழகியான மெலனியாவின் புகைப்படம், பாரம்பரிய முறையில் அல்லாமல், சற்று கவர்ச்சியாக இடம் பெற்றுள்ளது. இது குறித்து, ...

Read More »

காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கும்!

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு, மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட குடும்பம் ஒன்றின் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்களை காப்பாற்றுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் வீட்டோடு குறித்த குடும்பமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் டெபீ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் அடைமழை பெய்து வந்ததாகவும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அனர்த்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த குயின்ஸ்லாந்து அவசர சேவையின் பேச்சாளர், “இந்த வெள்ளப்பெருக்கில் இருந்து ...

Read More »

அவுஸ்ரேலிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு பயணம்

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இன்றிலிருந்து எதிர்வரும் 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ளார். இதன்போது வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்து அங்கு அவுஸ்திரேலியாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்பார்வை செய்யவுள்ளார். அத்துடன், இவர் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார் என சிறிலங்காவிலிருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Read More »

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அவுஸ்ரேலியா விஜயம்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) இன்று (திங்கட்கிழமை) அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் அவுஸ்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் உள்ள பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, அவர் அவுஸ்ரேலியாவின் பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பெண்களின் தரத்தை மேம்படுத்தல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து மல்க்கம் உடனான பேச்சுவார்த்தையின் போது அக்கறை செலுத்தப்படும் என சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் வைத்தியராக ஆள்மாறாட்டம்!

நண்பரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திருடி அவுஸ்ரேலியாவில் வைத்தியராக நடித்து ஆள்மாறாட்டம் செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 30 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முட நீக்கியல் துறை நிபுணராக பணியாற்ற இந்தியாவை சேர்ந்த ஷியாம் ஆச்சாரியா என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு இந்நாட்டுக்கு வந்துள்ளார். 2003-ம் ஆண்டிலிருந்து 2014 வரை சுமார் 11 ஆண்டு காலம் அந்த மருத்துவமனையிலும் அவுஸ்ரேலியாவில் உள்ள மூன்று இதர மருத்துவமனைகளில் உதவி வைத்தியராக  பணியாற்றிய ஆச்சாரியா, அந்நாட்டின் ...

Read More »