செய்திமுரசு

அவுஸ்ரேலியர்களின் மரணத்திற்கு காரணம் இதுவே! வெளியான தகவல்

அவுஸ்ரேலியர்களின் அதிகளவான மரணத்திற்கு இதயம் சம்பந்தமான நோய்களே காரணம் என சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவுஸ்ரேலியாவில் 2016ம் ஆண்டு மரணமடைந்தவர்களில் 12 வீதமானவர்கள் அதாவது 19,077 பேர் இதயநோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இரண்டாவது இடத்தில் Dementia ,Alzheimer’s ஆகியன காணப்படுகின்றன. 3ம் இடத்தில் பக்கவாதம் போன்ற cerebrovascular நோய்களும், 4ம் இடத்தில் புற்றுநோயும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Read More »

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 335 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அவுஸ்ரேலியா

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 335 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சார் பட்டேல், உமேஷ் ...

Read More »

அவுஸ்- சிறிலங்கா இடையிலான ஒப்பந்தம் குறித்த யோசனைக்கு அனுமதி!

நாட்டின் எல்லையினூடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் சிறிலங்கா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சிறிலங்கா – அவுஸ்திரேலியா இடையில் காணப்படுகின்ற மனித கடத்தல்கள் மற்றும் எல்லை மீறிச்செல்கின்ற ஏனைய குற்றங்களை தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களத்துக்கும் இடையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ...

Read More »

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்: அவுஸ்ரேலியாவில் கண்டனப் பேரணி!

ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணியொன்று அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அவுஸ்ரேலிய விளம்பரத்தில், விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு இந்து அமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் புதிய வீடியோ விளம்பரம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் அவுஸ்திரேலிய ...

Read More »

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ...

Read More »

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவான வாக்கெடுப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இதற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதாக, நேற்று (25) வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவாக ‘ஆம்’ என்று வாக்களிப்போம் எனக் கூறியவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 63 வீதமாக காணப்பட்ட நிலையில், தற்போது அது 57 ஆகக் குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இதற்கெதிராக ‘இல்லை’ எனத் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாகக் ...

Read More »

அவுஸ்ரேலியாவை ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும்: சச்சின்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்ரேலியாவை 5 போட்டியிலும் தோற்கடித்து ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும் என சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியாஅணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. முதன்முறையாக அவுஸ்ரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது கிடையாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடைபெற்ற 3-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் ...

Read More »

MDA:மெல்பேர்ன் பெண்களின் ‘ஜிமிக்கி கம்மல்’ நடனம்

Mandy Dance Academy என்பது மெல்பேர்னில் இயங்கும் ஒரு தமிழ் நடனக் குழுவாகும்.இந்நடனக் குழு தொடர்பிலும், இணையத்தில் பிரபலமடைந்திருக்கும் இவர்களது ஜிமிக்கி கம்மல் நடனம் தொடர்பிலும் அதன் நிறுவனர் Mandy மற்றும் அவரது மாணவர்கள் சுஜித் மற்றும் மதுவுடன் ஒரு உரையாடல்.

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். தவான் சேர்க்கப்படவில்லை. இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தால் அக்சார் முதல் மூன்று போட்டிகளில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ...

Read More »