அவுஸ்ரேலியாவை ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும்: சச்சின்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்ரேலியாவை 5 போட்டியிலும் தோற்கடித்து ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும் என சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அவுஸ்ரேலியாஅணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.

முதன்முறையாக அவுஸ்ரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது கிடையாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும் என தெண்டுல்கர் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு அணிக்கெதிரான தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்றால் ஒயிட்வாஷ் என்பார்கள். இந்திய அணி ப்ளூ கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடுவதால் சச்சின் தெண்டுல்கர் ப்ளூவாஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.