செய்திமுரசு

நினைவேந்தல் நிகழ்வை தடை செய்யாதிருக்க மனு

எதிர்வரும்   25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மேற்கொள்ளவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட வுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்ப டுத்தல் சட்ட விதிகளையோ காரணங்காட்டி அந்த நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்யக்கூடாதென மனுவின் ஊடாக ​கோரப்படவுள்ளது. வடக்கு மாகாண மூத்த பிரதி காவல் துறை  மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரியே இந்த மனுக்கள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்படவுள்ளன. ...

Read More »

3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்த ஆஸ்திரேலியா

பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க 3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் பிக் பாஷ் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை நடத்தி வருகிறது. பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடிக்கடி விதிமுறைகளை மாற்றம் செய்யும். கிரிக்கெட்டில் டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை தூக்கிப்போட்டு மேடா? பள்ளமா? எனக்கேட்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த சீசனில் மூன்று முக்கிய மாற்றங்களை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெல்ல முடியாது – புஜாரா கருத்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்தார். 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. இந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்தார். அதன் பிறகு தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா ...

Read More »

ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை

ஜோ பைடன் எச்சரித்தார்- ஹிலாரி ஆதரித்தார் – தனது நூலில் பராக் ஒபாமா ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை குறித்து ஜோ பைடன் தன்னை எச்சரித்தார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நாளை வெளியாகவுள்ள புரொமிஸ்ட் லான்டில் தெரிவித்துள்ளார். நேவி சீல்ஸ் நடவடிக்கை குறித்த கலந்தாலோசனையின் போது ஜோ அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார் என ஒபாமா எழுதியுள்ளார். 2011 மே மாதம் முதலாம் திகதி ஒபாமா நேவிசீல்ஸ் குழுவை பாக்கிஸ்தான் அனுப்பியிருந்தார். தோல்வியால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து ...

Read More »

உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க சிறிலங்கா  அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும்!

உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க சிறிலங்கா  அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (16) இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த ஐக்கிய நாடுகளின் ...

Read More »

“தடுப்பூசியால் மட்டுமே கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது”

“தடுப்பூசியால் மட்டுமே கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியாது”என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.   ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரவிக்கையில் ” கொரோனாத் தொற்றுக்கான  தடுப்பூசி தற்போதுள்ள கருவிகளுக்கு மாற்றாக அமையாது எனவும், தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை தொடர வேண்டும்” எனவும்  தடுப்பூசி கிடைத்ததும் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிப்பதால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, சுகாதார அமைப்புகளை ...

Read More »

2021 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு

கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக 267804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகையில் 78227 கோடியே 8091000 ரூபா ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலேயே இத் தொகை ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வின் ஜனாதிபதி செலவி னங்களுக்காக 934 கோடியே 5660000 ரூபாவும் ...

Read More »

ஆஸ்திரேலியா : வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதில் தாமதம்

ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் சோதனை முயற்சியாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை இத்தாமதம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருக்கிறார். கொரோனா சூழலுக்கு பிறகான 7 மாதக் காலத்தில் வெறும் 300 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வந்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளினால் ...

Read More »

நியூஸிலந்து, லத்தின் அமெரிக்காவின் உறைந்த இறைச்சியிலும் பொட்டலங்களிலும் கிருமித்தொற்று: சீனா

பிரேசில், பொலிவியா, நியூஸிலந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறைச்சியிலும் அதன் பொட்டலங்களிலும் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதாகச் சீனாவின் ஜீனான் (Jinan) நகரம் கூறியுள்ளது. அந்தப் பொருள்கள் ஷங்ஹாய் மூலம் வந்தன. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சுமார் 7,500 பேருக்கும் கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. உறைந்த இறைச்சியில் பலமுறை கிருமித்தொற்று தென்பட்டதால் அவற்றின் பரிசோதனையைச் சீனா அதிகரித்துள்ளது. இறக்குமதித் தடைகளையும் அது விதித்திருக்கிறது. உறைந்த இறைச்சிப் பொருள்களிலிருந்து மனிதர்களுக்குக் கிருமி பரவும் சாத்தியம் மிகக்குறைவு என ...

Read More »

கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்?

கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்? என்று அமெரிக்க  வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் வேக்சின் எனப்படும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருகின்றன. அதில் அமெரிக்க நாடும் ஒன்று. அமெரிக்காவில் உள்ள வான்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் வைத்தியர்கள்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகள் அதிக அளவில் தப்பி உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து ...

Read More »