செய்திமுரசு

கிளிநொச்சியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் 55 மோட்டார் எறிகணைகள் மீட்பு

கிளிநொச்சியில் பளை அரசாங்க மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த 55 மோட்டார் எறிகணை களை(ஷெல்) நேற்று காவல் துறை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மீட்டுள்ளனர். நிலத்தின் உரிமையாளர் குழி தோண்டிய போது இவற்றை அவதானித்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். காவல் துறை விஷேட அதிரடிப்படையினர் சகிதம் அனைத்து மோட்டார் எறிகணைகளையும் மீட்டெடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யவென கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவைப் பெற்றுள்ளனர்.

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் கனடா செல்ல முடியாத நிலை…!

ஆஸ்திரேலியாவில் உள்ள 97 அகதிகளை கனடாவுக்கு வரவேற்க கனடாவில் உள்ள Vancouver குடியமர்த்தல் முகமை தயாராக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தற்போதைய கொரோனா சூழல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த அகதிகளை கனடாவுக்குள் அனுமதிப்பதற்கான முதல்கட்ட விண்ணப்ப பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிட்னி நகரில் உள்ள கனடா விசா அலுவலகத்துக்கு அடுத்தக்கட்ட அனுமதிக்காக இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. “ஆனால், கொரோனா சூழல் இதனை அத்தனையும் மாற்றிவிட்டது,” என்கிறார் அகதிகளுக்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் சலீம் ஸ்பிண்டரி. கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கனடா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் சித்ரவதைக்கு உள்ளாகும் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு ஹோட்டலுக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “முந்தைய ஹோட்டலில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய ஹோட்டலில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar. ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போரிலிருந்து, இலங்கையின் இனப்படுகொலைப் போரிலிருந்து, ஈரானிலிருந்து என உலகின் பல நாடுகளில் ...

Read More »

விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Boxing day அன்று Delahey பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் Colac-Lavers Hill வீதியால் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 8 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீண்டநேரமாகியும் தனது நண்பர் குறிப்பிட்ட இடமொன்றிற்கு வராததையடுத்து அச்சமடைந்த சக நண்பர் அவசர சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார். ...

Read More »

துபாயில் அடுத்த மாதம் இலக்கிய திருவிழா- மலாலா பங்கேற்கிறார்

துபாயில் அடுத்த மாதம் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று பேசுகிறார். துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி ஒரு பெண்ணாக பள்ளிக்கு சென்றதால் ...

Read More »

2021 ஒக்டோபருக்குள் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும்-அவுஸ்திரேலியா

அடுத்தவருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா கொரோனா வைரசிற்கான மருந்துகளிற்கு அனுமதிவழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலவசமாக, சுயவிருப்பத்தின் அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என ...

Read More »

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மரணம்

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை-தொடாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் 117 வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ என்று அழைக்கப்படும் மூதாட்டி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வேலு பாப்பானி அம்மா 1903 ஆம் ஆண்டு மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். முதியோருக்கு அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டையின் மூலம் அவரது வயது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறித்த மூதாட்டிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் ...

Read More »

மன்னாரில் கண்வைத்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம்

மன்னார் தீவுக்கடலில் பெற்றோல் உண்டு என்ற கதையாடல் மட்டுமல்ல, பெட்ரோலிய ஆய்வுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் அழைந்திருந்தமை எல்லாம் நாம் அறிந்த செய்தி. ஆனால் மன்னார் தீவின் கனியவளங்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று ‘கண்’ வைத்திருப்பது மட்டுமல்லாது அவ்வளங்களை சத்திமில்லாமல் ஏற்றுமதி செய்துவருவதான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. 26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார்தீவின் மணலில் இல்மனைட் என்ற கனிய வளங்கள் உள்ளன. இக்கனிமம், வண்ணப்பூச்சுகள், மை, பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதனப் ...

Read More »

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை மாகாண ...

Read More »

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை ...

Read More »