இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மரணம்

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை-தொடாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் 117 வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ என்று அழைக்கப்படும் மூதாட்டி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வேலு பாப்பானி அம்மா 1903 ஆம் ஆண்டு மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.

முதியோருக்கு அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டையின் மூலம் அவரது வயது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

குறித்த மூதாட்டிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர்கள் தினத்தன்று, இந்நாட்டின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை, முதியோருக்கான தேசிய சபை வழங் கியமை குறிப்பிடத்தக்கது.