செய்திமுரசு

அமெரிக்க அதிபர் ஆனார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிஅமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லாரியை தோற்கடித்து அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி ...

Read More »

காயம் காரணமாக பீட்டர் சிடில் விலகியுள்ளார்

காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து பீட்டர் சிடில் விலகியுள்ளார். அவுஸ்ரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இதில் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் மிரட்டல் வேகத்தில் உருகுலைந்தஅவுஸ்ரேலிய அணி படுதோல்வியை சந்தித்தது.

Read More »

சேலை கட்டி கோவிலுக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் தெரசா மே

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து பெங்களூருவிலுள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.

Read More »

விண்வெளியில் இருந்து வாக்குப்பதிவு செய்த நாசா விஞ்ஞானி

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து தனது வாக்கினை நாசா விஞ்ஞானி ஷேன் கிம்ப்ரோக் பதிவு செய்தார். உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இவர்களைப் போலவே விண்வெளியில் உள்ள அமெரிக்க வீரர்களும் வாக்களிக்க நாசா சிறப்பு ஏற்பாடுகளை கடந்த 1997ம் ஆண்டு முதல் செய்திருக்கிறது. அதன்படி, ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்தில் ஆய்வினை மேற்கொண்டுவரும் அமெரிக்க விஞ்ஞானி ஷேன் கிம்போர்க், விண்வெளியில் ...

Read More »

புகலிடக்கோரிக்கையாளர்கள் மீதான வாழ்நாள் தடைக்கு லேபர்கட்சி எதிர்ப்பு

மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யும் அரசின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பில் நாடாளுமன்றில் அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ள சட்ட முன்வடிவுக்கெதிராக வாக்களிக்கப்போவதாக லேபர் கட்சி தெரிவித்துள்ளது.இன்று கூடிய லேபர்கட்சியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரீன்ஸ் கட்சியும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் செனட் அவையில் இச்சட்டமுன்வடிவு வெற்றிபெறுவதற்கு செனட் அவையின் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் சிறுகட்சி செனட்டர்களின் ஆதரவு அரசுக்கு தேவைப்படுகின்றது. ...

Read More »

எழுக தமிழ் செயற்பாட்டாளர் அலெக்ஸ் கைது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுக தமிழிற்கு பின்னரும் மாணவர்கள் படுகொலைக்குப் பின்னரும் தோன்றியிருக்கும் மக்கள் எழுச்சியினால் மிரண்டு போயுள்ள அரசாங்கம் மாணவர்கள் மீதான படுகொலையை நியாயப்படுத்த வேண்டிய சங்கடமான சூழ்நிலையில் யாழில் அசாதாரண கூழல் நிலவுவதாக காட்ட முனைவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே  தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவருமான அலெக்ஸ் அரவிந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் ...

Read More »

கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டம்

கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று மாலை 3 மணிமுதல் 6 மணிவரை இடம்பெறவுள்ள இக் கையெழுத்து போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்பாட்டின் இறுதியில், சேகரிக்கும் கையெழுத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ...

Read More »

திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருப்பதியில் இன்று 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது.திருப்பதி ஏழுமலையானுக்கு கார்த்திகை (தெலுங்கு பஞ்சாங்கம் படி) திருவோணம் நட்சத்திர நாளில், வருடாந்திர புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது. புஷ்ப யாகம் எவ்வித தடங்கல், இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டி தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலையே ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக் சேனர் முன்னிலையில் அர்ச்சகர்கள் அருகில் உள்ள நந்தவனத்துக்கு சென்றனர். அங்கிருந்து புற்று மண்ணை எடுத்து வந்து கோவிலுக்குள் ...

Read More »

புதிய அரசியலமைப்பில் 13வது திருத்தம் உள்வாங்கப்பட்டுள்ளது

புதிய அரசியலமைப்பின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் முன்னைய யாப்பின் 13வது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட அனைத்து உரிமைகளும் அப்படியே உள்வாங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு வரைபின் ஊடாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாகாண சபைகள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்படும். அத்துடன் ஜனாதிபதி பதவியில் உள்ளவர் நினைத்த மாத்திரத்தில் மாகாண சபைகளைக் கலைக்கும் வகையில் இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த அதிகாரமும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக ...

Read More »

யோஷிதவிற்கு அவுஸ்ரேலியா செல்ல விசா கிடைத்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, அவுஸ்ரேலியா செல்ல விசா கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் யோஷிதவுக்கு அவுஸ்ரேலியா செல்ல அனுமதிக்கப்படாமையினால் யோஷிதவின் இந்த விசா பிரச்சினை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக காணப்பட்டன. இந்த நிலையில் யோஷிதவுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என பலர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடந்த வாரம் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரகம் யோஷிதவுக்கு விசா வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையினால் யோஷித மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வளவு ...

Read More »