செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளருக்கு நீதி கிடைத்தது!

அவுஸ்ரேலியாவின் தொழிலாளர் நலன்சார் அமைப்பான Fair Work, இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு, குறைந்த ஊதியத்தை வழங்கிய நிறுவனம் ஒன்றிடமிருந்து, சுமார் 8,711 டொலர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. மெல்பேர்ணிலுள்ள Shelly Removals and Storage  என்ற நிறுவனத்தில் கடந்த வருடம் அக்டோபர் முதல் இவ்வருடம் ஜனவரி வரை இலங்கையிலிருந்து வந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பணிபுரிந்துள்ளார். இவர் வாகனத்தில் சென்று தளபாடங்களை ஏற்றி இறக்கும் பணியில் வாரமொன்றுக்கு 50 மணிநேரங்கள் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவருக்கு மணிக்கு 18 டொலர் என்ற கணக்கின்படி 30-38 மணித்தியாலங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ...

Read More »

எழுக தமிழை முடக்க முயற்சி! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக மட்டகளப்பு மற்றும் வவுனியாவினில் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எனினும் ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் அணி திரள தயாரகவுள்ளனரோ அங்கே அரசியல் ரீதியாக அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை பேரவையின் முக்கிய தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவித்துள்ள ...

Read More »

என் தோல்விக்குப் புலனாய்வுப் பிரிவே காரணம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றதற்கு, மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி காரணமெனத் ஹிலரி கிளிண்ட்டன் குறைகூறியிருக்கிறார். மின்னஞ்சல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணையை மீண்டும் தொடங்கியது தமது வெற்றியைப் பாதித்ததாகச் சொன்னார் அவர். ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்த திருமதி ஹிலரி, நேற்றைய சந்திப்பு ஒன்றில் அது குறித்துப் பேசினார். தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு,  ஹிலரியின் மின்னஞ்சல் விவகாரம் குறித்த விசாரணை மீண்டும் தொடங்கியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திருமதி ஹிலரி முன்னணி வகித்தார். எனினும் தேர்தலில் அவர் வெற்றிபெறவில்லை. இதற்கிடையே, நியூயார்க், ...

Read More »

தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட்- மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து

பலத்த மழையின் எதிரொலியாக தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் தொடரின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவின் பின்னடைவு

ஹோபர்ட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்து. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சில சாதனைத்துளிகள். 2 தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 1 ரன் எடுத்து அவுட்டானார்கள். இதன்மூலம் டாப் ஆர்டர் வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டானது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த ...

Read More »

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்

சென்னையை சேர்ந்த தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடிய தகுதி கொண்டவர் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை திருமணம் செய்துக் ...

Read More »

சிங்கள மேலாண்மைப் பார்வையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி!

அரசியல் கட்சி ரீதியாக மாறுபட்டிருப்பினும் மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனத்துவ மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அமெரிக்க வல்லரசின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 8ம் திகதி மக்கள் அளித்த வாக்குகளால் தெரிவானார். கருத்துக் கணிப்புகளையும், அரசியல் பகுப்பாய்வுகளையும், சர்வதேச ஊடகங்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி ஒரு சாதனை படைத்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அரசியலில் முன்னர் எந்தவொரு பதவியும் வகித்திராத இவர், ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள முதலாவது கோடீஸ்வர வர்த்தகர் என்பது இன்னொரு சாதனை. தேர்தல் பரப்புரைக் காலத்தில் சர்ச்சைகளின் நாயகன் என்று ஊடகங்களால் ...

Read More »

விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக வெளியான செய்தி பொய்யானது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஓமான் மற்றும் பிஜிஆகிய நாடுகளின் பிரஜைகள் அவுஸ்ரேலியாவிற்குள் விசா இல்லாமல் வந்து போவதற்கான உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதாக பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை மறுத்துள்ள குடிவரவுத் திணைக்களம் இது ஒரு வதந்தி எனவும் அவுஸ்ரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் புதிதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை எனவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Read More »

அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம்

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு,  நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக நீண்டநாட்களாக அமெரிக்கா – அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், ரொனால்ட் ரம்ப் அதிபராகப் பதவி ...

Read More »

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர். இவர் 55வயதை எட்டியுள்ள நிலையில், நேற்றுடன் (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார்.

Read More »