போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில், மணலாறில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்த சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த.

வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்.

இவர் 55வயதை எட்டியுள்ள நிலையில், நேற்றுடன் (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார்.