செய்திமுரசு

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்ய்பட்ட 21 பேரின் நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நினைவு நிகழ்வில் உயிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் ...

Read More »

மூடப்படும் தொழிற்சாலையால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை!

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரிலுள்ள ஹோல்டன் மோட்டார் வாகன உற்பத்தி நிலையம் மூடப்படுகிறது. இதனால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த வாகன உற்பத்தி ஆலைக்கு வாகன உபகரணங்களை வழங்கும் தொழிற்சாலைகளையும் சேர்த்தால், சுமார் 2,500 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. வேலை இழந்தவர்கள் புதிய வேலை தேடவும், இயல்பு வாழ்க்கை நடத்தவும் தெற்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கும் ஆதரவு தொடரும் என்று அந்த மாநில Premier Jay Weatherill தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென, முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றில் அரசு முன்வைத்த சட்டமுன்வடிவு, எதிர்கட்சிகளின் தந்திரோபாயமான நகர்வு மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒக்டோபர் 18 புதன்கிழமைக்கு முன்னர், தேவைப்படும் மாற்றங்களுடனான சட்டமுன்வடிவை தம்முன் சமர்ப்பிக்க வேண்டுமென, எதிர்கட்சிகளின் செனட்டர்களால் அரசுக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அரச தரப்பினரால் இதனை நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குறித்த சட்டமுன்வடிவு Senate Notice Board-இலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சட்டமுன்வடிவு மீண்டும் செனட் அவையில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படுவதும் அதற்கான ஒப்புதலைப் பெறுவதும் மிகக்கடினம் என ...

Read More »

அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும்!

அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும் என வடகொரிய கடிதம் அனுப்பியுள்ளது. உலக சமாதானத்தை நிலைநாட்டவும், போரைத் தவிர்ப்பதற்காகவும் அமெரிக்காவுடனான உடன்பாடுகளை நீக்கவேண்டுமென மேலும் குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் உறுதி செய்துள்ளார்.இந்தோனேஸியாவிலுள்ள வடகொரிய தூதரகமூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுண்டு அச்சுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு உலகின் இழப்பில் அமெரிக்கா நன்மையடையும் என்ற அமெரிக்க சிந்தனையையே டிரம்பின் வார்த்தைகள் பிரதிபலிக்கிறது என வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அணு ஆயுதப் போர் என்று ...

Read More »

கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கான வாக்கெடுப்பு!

விக்டோரிய மாநிலத்தில் Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய கருணைக் கொலையை ஆதரிக்கும் சட்டம், 24 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பின்னர் விக்டோரிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 47 பேர் ஆதரவு தெரிவித்தும் 37 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளதாக தெரியவருகிறது. பெரும்பான்மையான Labor கட்சி உறுப்பினர்கள், இரு Greens கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் மற்றும் சில Coalition நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டமூலம் தற்போது 40 ...

Read More »

UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதல் பசுபிக் நாடு அவுஸ்ரேலியா!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அவுஸ்திரேலியாவுக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது. ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு அவுஸ்ரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு உட்பட 15 நாடுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதலாவது பசுபிக் நாடு அவுஸ்திரேலியா என்றும் அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் மின்சக்தி மற்றும் எரிசக்தியில் பாரிய மாற்றம்!

‘National Energy Guarantee’ எனப்படும் மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் மின்சக்திப் பயன்பாடு தொடர்பில் பாரியளவிலான மாற்றத்தை இது கொண்டுவருமென பிரதமர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த திட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு குடும்பமும் வருடத்துக்கு 115 டொலர்கள் வரை தமது மின் கட்டணத்தில் சேமிக்கமுடியமென அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது. அதேவேளை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் ...

Read More »

வேலையைத் தூக்கியெறிந்த தொகுப்பாளினி!

அவுஸ்திரேலியாவில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் சக ஆண் ஊழியருக்கு நிகரான ஊதியம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி பிரபல பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் Lisa Wilkinson தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். குறித்த தொகுப்பாளினி Channel 9 தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை (Today Show) Karl Stefanovic உடன் இணைந்து Lisa Wilkinson தொகுத்து வழங்கி வந்தார். ஆண் தொகுப்பாளர் Karl ற்கு $2 மில்லியன் ஊதியமும் Lisa இற்கு $1.1 மில்லியன் ஊதியமும் வழங்கப்பட்டு ...

Read More »

எல்லை நிர்­ணயம் குறித்து யோசனைகள் பெறு­வ­தற்கு ஆணைக்­குழு நட­வ­டிக்கை

மாகா­ண­ச­பை­க­ளுக்கு நிர்­வாக மாவட்­டங்­களின்  கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் தேர்தல் தொகு­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான யோச­னைகள் மற்றும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு எல்லை நிர்­ணய ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு   17ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் வாக்­கெ­டுப்பு திருத்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­ப­டை­யிலே இந்த தேர்தல் தொகு­திகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­ஆ­ணைக்­கு­ழுவின் செய­லாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க  அறி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், மாகா­ண­ச­பை­க­ளுக்கு குறிப்­பிட்ட நிர்­வாக மாவட்­டத்தின் கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள முழு உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் நூற்­றுக்கு 50 க்கு ஈடான தொகையை தெரிவு ...

Read More »

கிளிநொச்சியில் இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு!

கிளிநொச்சி நகரில் தற்பொழுது இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதி இராணுவத்தினரின் முற்றுகைக்குள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவிலான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் இராணுவத்தினரின் பின்னால் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இராணுவத்தினர் மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்களில் பிரசன்னமாகியிருப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More »