செய்திமுரசு

அவுஸ்திரேலியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நபர் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்னர் தனது விந்தணுவை தானமாக கொடுத்து 19 குழந்தைகள் பிறந்துள்ளது. விந்தணுவை தானமாக கொடுத்த அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த நபர் தற்போது பாரிய பிரச்சனையை சந்தித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு Ian Wood என்பவர் தனது விந்தணுவை விக்டோரியா இனப்பெருக்க சிகிச்சை ஆணையத்திற்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், 19 குழந்தைகள் பிறந்துள்ளது. 15 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் அடங்குகின்றனர்.

Read More »

பனி வீழ்ச்சியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி!

வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும்.  இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.  இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று,  புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ...

Read More »

பறக்கும் விமானத்தில் சண்டை போட்ட பயணிகள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிகள் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பயணிகளிடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அவர்கள் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் சண்டையைத் தடுக்க விமான ஊழியர்கள் முயன்றும் அதில் எவ்வித பயனும் இல்லாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சிட்னிக்கே திரும்பச் சென்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் சண்டையிட்ட இருவரும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னரே விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பிஸ்ட்ஸ் ஃபைட் (fist ...

Read More »

சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி!

சீனாவின் கடும் பனிப்பொழிவால் விழும் அருவியின் அழகை மேலும் அழகூட்டும் வகையில் பனி உறைந்து கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது. தற்போது நிலவி வரும் குளிர்கால நிலை, வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள ஷான்டாங் மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் சில பிரமிப்பூட்டும் காட்சிகளை உருவாக்கியுள்ளது. இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பனி கொட்டித் தீர்த்து நீர்வீழ்ச்சி, பனி வீழ்ச்சியாக மாறி காணப்படுகிறது. வெப்பநிலையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்ததால், மணற்பாறைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு அதிர்ச்சியூட்டும் பனி அடுக்கை ஏற்படுத்தியுள்ளது. லிங்க்சுவன் கவுண்டியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில், ...

Read More »

வெடிபொருளின் பின்னணியிலுள்ள அரசியல்வாதியை அம்பலப்படுத்துவேன் – நிஷாந்த

புத்தளம், வனாத்தவில்லு  பிரதேசத்தில்  கிடைக்கப்பெற்ற  வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  மூடி மறைக்க  முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகு  விரைவில்  அம்பலப்படுத்துவேன் என  நாடாளுமன்ற   உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.   பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை   காரியாலயத்தில்  இன்று செவ்வாய்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்   கலந்துகொண்டு  கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில்  இடம்பெறுகின்ற  ஒவ்வொரு  சம்பவங்களும் தேசிய  பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே ...

Read More »

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி!

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். ஊழல் மோசடி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும்  அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More »

புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான்!

புத்தகங்களுடன் வளர்வது மட்டுமல்ல, புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான். புத்தகத்தை வாங்குவதும் அதை வீட்டில் அடுக்கி வைத்து வீட்டுக்கு வருபவர்களிடம் `என்னிடம் எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன பாருங்கள்’ என்று சொல்லிக்காட்டி பெருமைகொள்வதும் சுகமான அனுபவம்தான். இன்று பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்கான அறை என்று பெரிதாக இல்லை… குழந்தைகள் கையில் புத்தகமும் இல்லை. அந்த இடத்தை மொபைல்கள் ஆக்கிரமித்துவிட்டன. இவை, இன்றைய தலைமுறையினருக்கு புத்தகங்களின் அருமையையும் வாசிப்பின் அவசியத்தையும் யாரும் புரியவைக்கவில்லை என்பதையே காட்டுகின்றன. கடந்த இரண்டு வாரமாகச் சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சிக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் குடும்பத்தின் நிலை !

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த நடேசலிங்கம் – பிரியா என்ற ஈழத் தமிழ் குடும்பத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நாடுகடத்தும் முடிவை திரும்ப பெற முடியாது என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய பீட்டர் டட்டன் “அக்குடும்பம் நீதிமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் அனைத்திலுமே அவர்கள் அகதிகள் இல்லை என அறியப்பட்டது” எனக் கூறியுள்ளார். “காணாமல் போதல் சம்பவங்கள் ...

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு எந்தவொரு கட்சியையும் பிளவு படச்செய்வதற்கு விருப்பமில்லை. ஈ.பி.ஆர்.எல்.எஃப், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள். எனவே எந்த விதத்திலும் இப்போது இருக்கின்ற கூட்டமைப்பை பிளவுபடுத்தவில்லை. அதேபோல் ...

Read More »

முன்னாள் போராளி கைது!- ஆயுதங்கள் மீட்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களுடன் கிளிநொச்சி, பளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கரந்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் அமைந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 2 துப்பாக்கிகளும் 150 தோட்டாக்களும் மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »