செய்திமுரசு

போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ். பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவி்த்துள்ளது. அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஏற்கெனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ...

Read More »

கார் கதவை தானே சாத்திய இளவரசி – இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்!

லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று. ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது. ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு பல மொழிகளில் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக படகுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்திரேலிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை கமாண்டரும் விமானப்படைத் துணைத் தளபதியுமான Stephen Osborne எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; அவுஸ்திரேலியா தனது எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை, கடல்படை மற்றும் விமானப்படை ஆகியன அவுஸ்திரேலிய எல்லையை நோக்கிவரும் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்டுபிடித்து அவற்றை இடைமறிப்பதற்கான தமது நடவடிக்கைகளை ...

Read More »

உதவி செய்யப் போய் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கியவருக்கு உதவப் போன பெண் ஒருவர் மீது இன்னொரு வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும்போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதன்மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அப்போது சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த Emily (வயது 27) என்னும் பெண் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு உதவி செய்வதற்காக ஓடிச் ...

Read More »

திலீபன் மீது சத்தியம் செய்வோம்!

அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம். அதுவும், அஹிம்ஷையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபுக்கு மாத்திரமல்ல, அஹிம்ஷைப் போராட்ட மரபுக்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று, உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன். அப்படிப்பட்ட திலீபனின் நினைவு நாள்களில், தமிழ்த் தேசியச் ...

Read More »

அமெரிக்காவில் உளவு வேலை பார்த்த சீனர் சிக்கினார்!

அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றியது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சீனாவை சேர்ந்த ஜி சாக்குன் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். சீனாவை சேர்ந்தவர் ஜி சாக்குன் (வயது 27). அவர் மாணவர் விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் சிகாகோ நகரில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். 2015-ம் ஆண்டு மின் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். அமெரிக்காவில் குடியேறுகிற பிற நாட்டினர் அங்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய முடியும் என்பதால், ...

Read More »

மைத்திரி கொலைச் சதி! இந்தியர் நடவடிக்கை குறித்து சந்தேகம்!

சிறிலங்கா ஜனாதிபதியை கொலைச் சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையின் நடவடிக்கைகள் குறி;த்து சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்களையும் கொலை செய்வதற்கான சதி முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தோமஸ் என்ற இந்திய பிரஜை தொடர்பிலேயே அமைச்சர் திவயினவிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். தோமஸ் என்ற இந்திய பிரஜையும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவில் எந்த வித வருமானமும் இன்றி ஒன்றரை வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் அமைச்சர் ...

Read More »

காஞ்சூரமோட்டை மக்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்!

வவுனியா நெடுங்கேணி பிரதேச செலயகப் பிரிவில் உள்ள காஞ்சூரமோட்டை கிராமத்தைச்  பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.   தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பியுள்ள இந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய அனுமதியை வழங்கியுள்ள போதிலும், வனவளத்துறை அதிகாரிகள் அதற்குத் தடை விதித்துள்ளதாகவும் சுட்டிக்கட்டியுள்ளனர். இது குறித்து வனவளத்துறை அதிகாரிகள், காஞ்சூரமோட்டை கிராமத்தில் அத்துமீறி குடியேறுவதற்கு அனுமதிக்க முடியாது. அங்குள்ள காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் அதற்குரிய காணி அனுமதிப்பத்திரங்களின்றி அங்கு குடியேறுவது ...

Read More »

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மேலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்போது அவர்கள் தொடர்பில் தேடிப்பாரக்கும் பொறுப்பை காவல் துறைக்கு வழங்க வேண்டும். அவர்கள் காவல் துறை நிலையத்துக்கு வந்து தங்களை உறுத்திப்படுத்தவேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம். எனினும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த ...

Read More »

தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுதோறும் ...

Read More »