போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ். பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவி்த்துள்ளது. அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஏற்கெனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேற்கொள்ளும் போராட்டம் அவர்களது உயிருக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையிலும் விரக்கதியின் உச்சத்திற்குச் சென்றுள்ள குறித்த இளைஞர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பில் ஈடுபட்டனர். தற்போது மருத்துவ உதவியையும் ஏற்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில் கைதிகளது போராட்டத்தின் நியாயத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் கைதிகளின் போராட்டத்திற்கு பலம் சேர்த்து அவர்களது விடுதலையை விரைவாக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கைதிகள் பிரச்சினையை உங்கள் ஒவ்வொருவரதும் சொந்தப் பிரச்சினையாக கருதி அனைத்து பொது அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் உயர்கல்வி நிறுவன மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள், ஏனைய கல்விச் சமூகத்தினர், விவசாய அமைப்புக்களை சார்ந்தோர் வர்த்தக சமூகத்தினர் கடற்தொழில் சமூகத்தினர் அரச அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் பொது மக்கள் இப்போராட்டத்திற்கு முக்கியததிவம் கொடுத்து அனைவரும் தவறாது இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை வெளியீட்டு உள்ளது.