அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்போது அவர்கள் தொடர்பில் தேடிப்பாரக்கும் பொறுப்பை காவல் துறைக்கு வழங்க வேண்டும். அவர்கள் காவல் துறை நிலையத்துக்கு வந்து தங்களை உறுத்திப்படுத்தவேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம்.

எனினும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது. வழக்கு விசாரணைகள் முடிந்த பின்னர் அரசாங்கத்தினால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.