செய்திமுரசு

மாற்று அணி உடையுமா? ஒட்டுமா?

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று. மேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் spent forces- தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை ...

Read More »

சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு பயணத் தடை!

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் ...

Read More »

சமூக ஊடகங்களில் இலக்குவைக்கும் மகிந்த ஆதரவாளர்கள்!

மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் பணியாற்றிய பின்னர் நாமல்ராஜபக்சவின் உதவியுடன் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றியவருமான செனானி சமரநாயக்க தனது டுவிட்டர் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை இலக்குவைத்து கருத்துக்களை பதிவு  செய்கின்றார் ...

Read More »

கராச்சியில் சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது- பாகிஸ்தான்

கராச்சியில் உள்ள சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சீன தூதரகம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டது. அதன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீன தூதரக தாக்குதலுக்கு டெல்லியில் திட்டமிடப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த தாக்குதலை பலுசிஸ்தான் விடுதலைப்படை என்ற அமைப்பு நடத்தியுள்ளது. அதன் கமாண்டர் அஸ்லம் என்கிற ...

Read More »

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்!

ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் ...

Read More »

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது!

தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருத வழி செய்யும் என முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழர்களின் உரிமைகள், உரித்துக்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார அபிவிருத்தி ...

Read More »

மாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம்

“யாழ்ப்பாணம் கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது.எனினும் நினைவுகூருவதற்கு எந்த தடையையும் நீதிமன்றம் வழங்கவில்லை. “வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read More »

பைசா நகர் சாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது!

பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டதையடுத்து,  அதற்கு இனி ஆபத்து இல்லை என பொறியியலாளர்கள்  தெரிவித்துள்ளனர். இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர். கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது. ஆனாலும் அது ...

Read More »

சிட்னியில் காவல் துறை அதிகாரி கொலை! உதவிய நபருக்கு 38 வருட சிறை!

சிட்னியில் 22 வயது நபர் ஒருவருக்கு NSW நீதிமன்றம் 38 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. காவல் துறை  அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறுவன் ஒருவரை ஏவிவிட்டமை மற்றும், அந்த சிறுவனின் சகோதரிக்கு பணம் கொடுத்து அவரை சிரியாவுக்கு சென்று பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயிற்சியெடுக்க தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு சிட்னி பரமட்டா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Curtis Cheng என்ற காவல் துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் ...

Read More »

மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்?

அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார். 2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து நூலொன்றை எழுதியுள்ள லின்ட்சே ஹில்சம் 2001 இல் மேரி கொல்வின் இலங்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கேள்வி- இலங்கை தொடர்பான அந்த கதை குறித்து அறிய விரும்புகின்றேன்- அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமான காயம் எவ்வாறு ஏற்பட்டது? பதில்- ...

Read More »