2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார். வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக அமையாத காரணத்தினால் இவ்வழக்கிலிருந்து 13 எதிரிகளையும் விடுவிப்பதாக திருமலை நீதவான் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன்!
பிடிபட்டால் அவ்வளவுதான், நாடு கடத்தி விடுவார்கள் என்று கூறும் இந்திய இளைஞர் ஒருவர், நான் எந்த தவறும் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் குமார். பத்து ஆண்டுகளாகிவிட்டது அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து. மாணவர் விசா காலாவதியானதும், spousal விசாவுக்கு முயற்சி செய்யும் நேரத்தில் காதலியைப் பிரிய வேண்டியதாயிற்று. புதிய விசா பரிசீலனையிலிருக்கும்போது குமார் நாட்டை விட்டு வெளியேற மறுத்ததால், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடிவு செய்தார் ...
Read More »மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி!-ரிஷாத்
ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, ...
Read More »தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர். அவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி செனட் சபை ...
Read More »காணமல்போனோர் அலுவலகம் செல்லும் சபாநாயகர் தலைமையிலான குழு!
காணமல்போனோர் பற்றி அலுவலகத்திற்கு நாளை திங்கட்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று செல்லவுள்ளது. காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் தலைமையகம் சிராவஸ்தி மாளிகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன தலைமையிலான குழுவொன்று மேற்பார்வை விஜயமொன்றைச்செய்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே தற்போது சபாநாயகர் தலைமையிலான குழுவினர் அங்கு செல்லவுள்ளனர். சிராவஸ்தி மாளிகையானது பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகமாகவும், ஓய்வு விடுதியாகவும் இருந்தது. பின்னர், மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகமும் அங்கு ...
Read More »முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவு படைத்தலைமையகத்துக்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பழைய பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் காவல் துறை , படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த ...
Read More »வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர்!
வடகொரியாவால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவர் அலெக், தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக் சிங்லே(29) என்ற மாணவர், முதுகலைப் பட்டம் பயில வடகொரியா சென்றுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக மாணவரின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், அவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவர் அலெக் சிங்லே கடந்த வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக தெளிவான ...
Read More »மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு!
தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை தென்னிலங்கை அதிகாரத்தரப்பினரால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வரலாறு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்கள், தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எவ்வாறு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனரோ அதேபோன்று மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர். நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த தமிழ் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்தவர்களாகவும் எதிர்பார்ப்பு அற்றவர்களாகவும் மாறியிருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது. ஆனால் அதேபோன்று தமிழ் மக்கள் தீர்வுத் திட்டம் தொடர்பில் ...
Read More »புராதன நகராக ஜெய்ப்பூர் தேர்வு – யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு
யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு ...
Read More »10 இராணுவத்தினர் படுகாயம்!
அட்டாலைசேனை நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இராணுவ வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »
Eelamurasu Australia Online News Portal