செய்திமுரசு

அர­சியல் ‘வேட்டை’

ராஜ­கி­ரிய பகு­தியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்­சைக்­கு­ரிய விபத்து ஒன்று தொடர்­பாக, முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு, சில நாட்­களில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இவர் கைது செய்­யப்­பட்ட போது,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரைக் கைது செய்­வ­தற்குத் தேவை­யான நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை, நீதி­மன்ற பிடி­யா­ணையும் இருக்­க­வில்லை. கைதுக்­காக முன்­வைக்­கப்­பட்ட கார­ணமும் மிகவும் பல­வீ­ன­மா­னது.   மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தில் யாரும் உயி­ரி­ழக்­க­வு­மில்லை. சம்­பிக்க ரண­வக்­கவின் வாகனம், நேர­டி­யாக மோதவும் இல்லை. ...

Read More »

இணைப்பாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01.01.2020) முன்னெடுக்கப்பட்டது.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read More »

அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்புடைய துறை என்ற ரீதியில்  இராணுவமானது எச் சந்தர்ப்பத்திலும் ஏற்படக் கூடிய அனைத்து சவால்களையும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.   ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: முறையான பயிற்சி மூலமே உள்ளக அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: வனவிலங்குகளைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதற்கிடையில் வனவிலங்கு சரணாலாயம் ஒன்றிலிருந்து 200க்கும் அதிகமான வனவிலங்குகளை ஊழியர்கள் காப்பாற்றினர். ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தளங்களும், வனவிலங்கு சரணலாயங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. இந்த ...

Read More »

புத்தாண்டில் சோகம்: இந்தோனேசியா மழை வெள்ளத்துக்கு 9 பேர் பலி!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில் இன்று 9 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேசியாவில் மட்டும் சோகமான புத்தாண்டாகத் தொடங்கியுள்ளது. ஜகார்த்தா நீரில் வீடுகளும், கார்களும் மூழ்கின. மக்கள் சிறிய ரப்பர் லைஃப் படகுகள் அல்லது டயரின் உள் குழாய்களில் துடுப்பு செலுத்திச் செல்வதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. வணிக மற்றும் ராணுவ விமானங்களைக் கையாளும் ஹலிம் பெர்தானகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கடுமையான வெள்ளம் ...

Read More »

உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்!

நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை இன்று வரவேற்று மகிழ்ந்தனர். * நியூசிலாந்து மக்கள் உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடினர். * அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றனர். * கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை!

காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மானியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஏற்கனவே இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகி விட்டது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 9 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் வெயிலின் தாக்கம் ...

Read More »

அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி!

சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அச்சு ஊட­கங்­களும், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும் தமி­ழுக்கு மிகவும் ஆத­ர­வாக இருப்­ப­துடன், ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­க­ளிலும் தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், சீன­மொழி மற்றும் மலே மொழி ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்­டு­க்களில் அச்­சி­டப்­ப­டு­கி­றது. தமி­ழுக்­கு­ரிய அந்த அந்­தஸ்தை எந்தத் தடங்­க­லு­மின்றித் தொடர்ந்து பேணு­வதில் அர­சாங்கம் முழு­மை­யான உறு­தி­யுடன் இருக்­கி­றது. சிங்­கப்­பூரின் வெளி­யு­றவு அமைச்­ச­ரான விவியன் பால­கி­ருஷ்ணன் கடந்த ஞாயி­றன்று ...

Read More »

திசை திருப்பப்படும் பிரச்சினைகள்!

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், முளைத்துக் கொண்டிருக்கும் ஒவ்­வொரு பிரச்­சி­னை­யையும் மறைக்க இன்­னொரு புதிய பிரச்சினைகள் உரு­வாக்­கப்­பட்டு வருகின்­றன. சுருங்கச் சொல்லின், பெரிய கோடு – சிறிய கோடு தத்­துவம் தான். ஒரு விவ­கா­ரத்தின் மீது குவி­கின்ற மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்கு,  இன்­னொரு விவ­கா­ரத்தின் மீது அதிக கவ­னத்தைக் குவிக்க வேண்டும். அது மக்­களின் கோபத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தைக் காப்­பாற்றும். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த­வுடன், சில அத்­தி­யா­வ­சியப் பொருட்களின் வரி­களைக் குறைத்தும், விலை­களைக் குறைத்தும், மக்­களின் அபிமானத்தை வெல்ல முயன்­றது. ஆனாலும், ...

Read More »

நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள்!

மின் உற்­பத்­திக்­காக எரி­சக்தி மூலங்­களை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை தற்­போது நாட்டில் நில­வு­கின்ற போதிலும் மக்­க­ளுக்கு தீங்கு இன்­றிய வகை­யி­லேயே உற்­பத்­திகள் இடம்­பெற வேண்டும் என்று தெரி­வித்த கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை  நிலக்­க­ரி­யினால் சூழ­லுக்கு மோச­மான விளை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன என்றும் குறிப்­பிட்டார். சுற்­றாடல் நீதிக்­கான கேந்­திர நிலை­யத்­தினால் நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; நிலக்­கரி இயற்கை எரி­வா­யு­விற்கு அடுத்­த­தாக மூன்­றா­வது மாற்று மூல­மாக ...

Read More »