நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள்!

மின் உற்­பத்­திக்­காக எரி­சக்தி மூலங்­களை பயன்­ப­டுத்த வேண்­டிய நிலை தற்­போது நாட்டில் நில­வு­கின்ற போதிலும் மக்­க­ளுக்கு தீங்கு இன்­றிய வகை­யி­லேயே உற்­பத்­திகள் இடம்­பெற வேண்டும் என்று தெரி­வித்த கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை  நிலக்­க­ரி­யினால் சூழ­லுக்கு மோச­மான விளை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன என்றும் குறிப்­பிட்டார்.

சுற்­றாடல் நீதிக்­கான கேந்­திர நிலை­யத்­தினால் நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது;

நிலக்­கரி இயற்கை எரி­வா­யு­விற்கு அடுத்­த­தாக மூன்­றா­வது மாற்று மூல­மாக இருக்­­கி­றது. எவ்­வா­றெ­னினும் நிலக்­க­ரி­யினால் ஏற்­படும் பாதிப்­பு­களை  அனல் மின் நிலை­யத்­தினை சூழ­வுள்ள பிர­தேச மக்­களை அவ­தா­னிப்­பதன் மூலம் அறிந்­து­கொள்­ள­மு­டியும். அனைத்­தையும் மீறி தற்­போது பயன்­ப­டுத்­தப்­படும் நிலக்­க­ரி­யா­னது சுத்­த­மான நிலக்­கரி என்ற வதந்­திகள் பல­ராலும் பர­வப்­பட்டு வரு­கின்­றது. நிலக்­க­ரி­யினால் நன்­மைகள் வரு­கின்­றன என்ற கட்­டுக்­க­தை­களும் சிலரால் பரப்­ப­ப்படு­கின்­றன. அவை அனைத்­தையும் தொழிற்­சாலை நிர்­வாகம் மட்­டுமே பொறுப்­பேற்க வேண்டும்.

வழக்­க­மான  புதுப்­பிக்­கக்­கூ­டிய எரி­சக்தி மூலங்­க­ளா­கிய சூரிய சக்தி, காற்று, மற்றும் உயிர்த்­திண்ம கழிவு  போன்­ற­வற்றின் பயன் பற்­றிய உண்­மை­யான மற்றும் ஒதுக்க முடி­யாத ஆதா­ரங்கள் இலங்­கையில் மட்­டு­மன்றி  உலக நாடு­களின் எந்த பகு­தி­யிலும் தொடர்ந்தும் நிரூபிக்­க­ப்பட்டு வரு­கின்­றன. எனினும் அதை­யெல்லாம் தவிர்த்து  நிலக்­க­ரி­யினை அறி­மு­கப்­ப­டுத்தி மக்­க­ளுக்கு தீங்­கினை  விளை­விக்கும் வகை­யி­லான மின் உற்­பத்­தி­யினை மேற்­கொள்­வது எவ்­வாறு அபி­வி­ருத்­தியில் உள்­ள­டங்கும்.

எனினும் உலக நாடுகள் புதுப்­பிக்­கத்­தக்க சக்­தி­களை கொண்டு மின் உற்­பத்­தியை மேற்­கொள்ளும் அதே­வேளை  இலங்கை தற்­போதும் நிலக்­க­ரி­யினை தழு­விய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

நிலக்­கரி சிறந்த மூன்­றா­வது தெரி­வாக மட்­டுமே உள்­ளது என்ற கருத்தை பொய்­யாக்கும் வகையில் சில சான்­றுகள் காணப்­ப­டு­கின்­றன. உலகின் எந்த பகு­தி­களில் உற்­பத்தி செய்­யப்­பட்­டாலும் நிலக்­க­ரி­யா­னது பல மாசுக்­களை கொண்ட நிலை­யி­லேயே காணப்­படும்.

ஆலையில் இருந்து புகையை வெளி­யேற்­றக்­கூ­டிய புகை­ப்போக்­கிகள் தங்­கி­யி­ருக்கும் கந்­தகம், பாத­ரசம், மற்றும் பிற கன உலோ­கங்கள் போன்­றன வெளி­வரும் பிற வாயுக்கள் மற்றும் உலோ­கங்­களை  தக்­க­வைக்கும். அதன் பின்னர் அவை ஆலையை குளிர்­வ­டைய செய்யும் நீரா­னது சூழல் கட்­ட­மைப்பில்  நிரந்­த­ர­மாக தங்­கி­விடும். ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட கழி­வு­க­ளுடன் மேலும் கழி­வுகள் நிறைந்­து­விடும். இதற்கு நிரந்­தர தீர்வென்று எதுவும் இல்லை.

500 மெகாவோல்ட் தூய்­மை­யான நிலக்­கரி மின் உற்­பத்தி நிலையம் மேலே உள்ள உயர் அழுத்­தங்கள் மற்றும் வெப்­ப­நி­லை­யுடன் இயங்­கி­னாலும் கூட அது சுற்­றுப்­புற சூழ­லுக்கு ஆண்­டு­தோறும் கீழ்­வரும் அள­வு­க­ளி­லே  மாசுக்­களை வெளி­யிடும். இந்த கழி­வுகள் சூழலில் தங்­கி­யி­ருக்கும்.

அமெ­ரிக்­காவின் சூழல் பாது­காப்பு நிறு­வ­னத்தின் தர­வு­களின் அடிப்­ப­டையில் வெளி­யி­டப்­பட்ட கணிப்­புகள் அடிப்­ப­டையில், சாதா­ரண மாசு வகை­க­ளாக -கந்­தகம் வரு­டாந்

தம் 10,000 தொன்  அள­விலும், சக்தி 193,000 தொன் அள­விலும், சாம்பல் 125,000 தொன்  அள­விலும் விச­முள்ள உலோ­கங்கள் அடிப்­ப­டை­யில்-­ ஈயம் 770 கிலோ­கிராம், மிக அதிக விஷ­மான பாத­ரசம் 410கிலோ­கிராம், குரோ­மியம் 400 கிலோ­கிராம், நிக்கல் 385 கிலோகிராம் மற்றும் ஆசனிக் போன்ற கழிவுகள் சூழலிலே கலக்கப்படுகின்றன.

மேற்கூறிய கணிப்புகளில் 50 வீதம் சரியானது என்ற வகையில் இருந்தாலும் தூய்மை யான நிலக்கரி என்ற  போர்வையில் விசத்தையே இலங்கைக்கு இறக்குமதி செய்கி றோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் வருடங்க ளில் சூழலில் சேரும் இரசாயனங்களின் அளவுகளில்  மாத்திரமே மாற்றங்கள் நிகழும்.