செய்திமுரசு

உலக நாடுகளிடம் ஒத்துழைப்பு இல்லை’: ஐ.நா பொதுச்செயலர் விரக்தி

கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளின் தலைவர்களிடையே ஒத்துழைப்பு இல்லையென ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து இரண்டாம் உலக போருக்கு பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என கூறிய குட்டரெஸ், சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மார்ச் 23ம் தேதி அனைத்து சண்டை சச்சரவுகளை விடுத்து கொரோனாவை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. தற்போது உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...

Read More »

செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’

சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள், முதலில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனாவுக்கு ஒருவர் பலி

ஒரு மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கரோனா இரண்டாம் ...

Read More »

சினமன் கிராண்டில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் குறித்து சிஐடியினர் தெரிவித்திருப்பது என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜனவரி முதல் ஏப்பிரல் வரையிலான காலப்பகுதியில் 45 மில்லியனை செலவு செய்தார் என சிஐடி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சினமன் கிராண்டில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட இன்சாவ் இப்ராஹிம் முதல் நான்கு மாதங்களில் 45 மில்லியனை செலவிட்டுள்ளார், தீவிரவாதத்தினை ஊக்குவிப்பதற்காக இந்த பணத்தினை அவர் செலவிட்டுள்ளார் என சிஐடி அதிகாரியொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ...

Read More »

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை சிறிலங்கா  உறுதி செய்யவேண்டும்- ஐந்து சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு,எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு,சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,உட்படஐந்து அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன தரிசா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ...

Read More »

முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் முகதடுப்புகள், முககவசங்கள் தயாரிப்பு

அபுதாபியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் (3டி பிரிண்டிங்) முறையை பயன்படுத்தி முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் (3டி பிரிண்டிங்) முறையை பயன்படுத்தி முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்த பல்கலைக்கழகங்கள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக பயன்படுத்தப்படும் முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் அமீரக பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண பிரதியெடுத்தலின் அடிப்படை நுட்பமானது ஒரு குறிப்பிட்ட ‘ரெஸின்’ ...

Read More »

நாகபூசணி அம்மன் ஆலய விவகாரம்: சைவ மக்களை மனவேதனைக்குட்படுத்தியுள்ளது!

ஆலயங்களின் புனிதத்துவத்தை கேள்விக்குறியாக்காத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவின் போது, பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினர் ஆலயத்திற்குள் பாதணிகளுடன் நடமாடித்திரிந்தமை சைவ மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழா கடந்த இருபதாம் திகதி இடம்பெற்றது. இலங்கையில் நாகர் ஆட்சியுடன் ...

Read More »

எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை. எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பிழை விடும்போது அவற்றை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதும் முக்கியமானது எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன். யாழ். ஊடக அமையம் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவரது ஊடகவியலாளர் மாநாட்டுத் தகவல் வருமாறு; கேள்வி ; தேர்தல் நடவடிக்கைக்கு மக்களிடம் நிதி உதவி கோரியதை ஏனைய தமிழ் கட்சிகள் ...

Read More »

தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு

தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் 2018 ஆம் ஆண்டு கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதி சந்தித்து பேசினர். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே நீடித்து வந்த பகைமை மறைந்து இணக்கமான சூழல் உருவானது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற ...

Read More »

அவுஸ்திரேலியா e-கல்வி அறக்கட்டளை ஆசிரியர் பற்றாக்குறை நீக்க உதவி!

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு நிகர்நிலை ஆசிரியர்களை (online Teachers) வழங்குவதன் மூலம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவிலிருந்து செயற்படும் e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) அமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள இவ்வாறான பாடசாலைகளுக்கு Zoom செயலி மூலமும் மற்றும் இணைய வழிகளின் மூலமும் கற்பிக்கும் திட்டமொன்றையே e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) ஆரம்பித்துள்ளது. முக்கியமாக, ஆசிரியர்கள் தட்டுப்பாடான உயர்தர பாடங்களான பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் ஆகியவற்றுக்கும், வகுப்பு 6-11 வரையான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ...

Read More »