அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலிய கர்ப்பிணி பெண் இந்தியாவில் கொலை!

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியில் வசித்து வரும் ரன்வித் கவுர் என்ற பெண்மணி கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இந்தியா வந்துள்ளார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார் . இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி பஞ்சாப்பிலுள்ள Bagge Ke Pipal என்ற பகுதியில் தனது ...

Read More »

மெல்பர்ன் நெடுஞ்சாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 92 வயதான முதியவர்!

மெல்பர்னின் Monash நெடுஞ்சாலையில் Mobility ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற 92 வயோதிபர் முதியவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் காவல் துறை  இடைநிறுத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இவ்வீதியில் குறித்த முதியவர் சென்றுகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டி ஒருவர் அம்முதியவரை பாதுகாப்பதற்காக Hazard விளக்கினை ஒளிர்ந்தபடி அவரைப் பின்தொடர்ந்தார். அதேநேரம் காவல் துறைக்கு அறியத்தந்திருந்தார். இதையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் முதியவரை இடைநிறுத்தி பாதுகாப்பாக மீட்டனர். தனது காரில் முதியவரைப் பின்தொடர்ந்த Bruce என்ற ...

Read More »

அவுஸ்திரேலிய நூலகத்தைக் கலங்கடித்த தூரியன்!

அவுஸ்திரேலியாவின் கான்பரா (Canberra) பல்கலைக்கழக நூலகத்தில் ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சி நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் கடுமையான வாடை குறித்த புகாரின் பேரில் தீயணைப்பாளர்கள் நூலகத்துக்கு விரைந்தனர். ஆறே நிமிடங்களுக்குள்ளாக அந்தக் கட்டடத்திலிருந்து சுமார் 550 பேர் வெளியேற்றப்பட்டனர். ஒரு மணி நேரத் தீவிரத் தேடலுக்குப் பின்னர் குப்பைத் தொட்டியில் தூரியான் பழம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் கண்டுபிடிக்கக் கூடிய குழுவைச் சேர்ந்தோர் அந்த வட்டாரத்தின் காற்றுத் தரம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

Read More »

அவுஸ்திரேலிய நாணயத்தாளில் தவறாக அச்சிடப்பட்ட சொல் !

அவுஸ்திரேலியாவின் அனைத்து 50 டொலர் நாணயத்தாள்களிலும் ஒரு வார்த்தையொன்று தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் 50 டொலர் நாணயத்தாளில் ‘ரெஸ்பொன்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பொன்ஸிபில்டி’ (responsibilty) என்று அச்சிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் குறித்த நாணயத்தாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இத்தனை நாட்கள் யாரும் பிழையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் அதிலிருக்கும் பிழையை கண்டறிந்துள்ளார். அத்துடன் குறித்த நபர் இன்ஸ்டகிராமில் அதனை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது அவுஸ்திரேலிய ரிசர்வ் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், குறித்த நாணயத்தாளில் பிழை இருப்பது உண்மை தான் என ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மே 20ம் திகதி புதிய சட்டம்!

காவல் துறையிடம்  சிக்கும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் அந்த இடத்தில் வைத்தே ரத்துச் செய்யப்படும்வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது இந்த நடவடிக்கை பின்பற்றப்படும். எதிர்வரும் மே 20ம் திகதி இப்புதிய சட்டத்தின் பிரகாரம் நடைமுறைக்கு வரவுள்ளது. வாகன ஓட்டி ஒருவரை பரிசோதிக்கும் போது 0.05 என்ற அனுமதிக்கப்பட்ட blood alcohol concentration(BAC) அளவைவிடவும் சற்று அதிகமாக இருந்தால்கூட (low-range drink-drivers blood alcohol concentration of 0.05 to less ...

Read More »

அவுஸ்திரேலிய பிரதமரை முட்டையால் அடித்த பெண்ணுக்கு நீதிபதியின் உத்தரவு!

அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மீது முட்டையால் தாக்கிய பெண்ணுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்கள். தாக்குதல் நடத்திய 24 வயதான பெண் எதிர்வரும் மே 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி உத்தரவிட்டுள்ளது. கடும் நிபந்தனையுடன்கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் Scott Morrison   Albury பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அவருக்கு பின்புறமாக வந்த பெண்மணி அவரது தலையின் பின்புறமாக முட்டையால் தாக்குதல் நடத்தியிருந்தார். பிரதமரின் பாதுகாவலர்களால் உடனடியாகவே மடக்கிப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண்மணி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சோதனையிட்டபோது அவரது கைப்பையிலிருந்து ...

Read More »

ஆஸ்ரேலியப் பிரதமர் மீது முட்டை வீச்சு!

ஆஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. நேற்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது மக்களுடன் நின்று சந்தித்துக்கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் பின்பக்கமாக வந்து பிரதமரின் தலையில் முட்டையை வீசியுள்ளார். முட்டையை வீசிய பெண்ணைப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். முட்டை வீசிய இளம் பெண் ஓடும் போதும் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கி பிடிக்கும் முயற்சியில் வயோதிப் பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். விழுந்த வயோதிபப் பெண்ணை பிரதமர் ஸ்கூட் மொரிசன் எழுப்பி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்!

ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக  முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான். திருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில்  ...

Read More »

இந்திய சுற்றுலாவாசியை வெளியேற்றிய ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடந்த மே 2ம் திகதி மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் பரிசோதனை நடத்திய போது இக்காணொலி கண்டெடுக்கப்பட்டதாக இன்று (மே 05) ஆஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையை தொடர்ந்து அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் சுற்றுலா விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 2ம் திகதி முதல் பெர்த் குடிவரவு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மூன்று கண்ணுடன் சிக்கிய அதிசய பாம்பு!

அவுஸ்திரேலியாவில் மூன்று கண் கொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவின் Humpty Doo பகுதியில் இருக்கும் Arnhem தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் Monty என்ற பெயர் கொண்ட பாம்பை Northern Territory Parks and Wildlife அதிகாரிகள் கண்டுள்ளனர். அந்த பாம்பிற்கு மூன்று கண்கள் இருந்ததாகவும், சுமார் 40 செ.மீற்றர் நீளம் இருந்ததாகவும், இளம் பாம்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, ஒரு மண்டை ஓடு மற்றும் ஒரு ...

Read More »