அவுஸ்திரேலியமுரசு

விபத்தில் இருவர் பலி : அவுஸ்திரேலியாவில் சம்பவம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் புகையிரதம்  தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 160 பயணிகளுடன் அதிக வேகத்தில் பயணித்த குறித்த ரயிலானது தண்டவாளத்தில் இருந்து விலகி சில மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையிலேயே குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர்  உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

காட்டுத் தீ தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்படும்!

அவுஸ்திரேலியோ மற்றும் தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 33 பேர் உயிரிழந்ததுடன் பல சொத்துக்களும் உயிரினங்களும் தீயில் கருகி நாசமாகின. இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்பத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளார் அத்தோடு கடந்த ஆண்டு செம்டெம்பர் மாதம் ஆரம்பித்த காட்டுத் தீ பல்வேறு பகுதிகளில் அழிவுளை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்களின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார். நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் வீரராக இருந்த இவர் ரக்பி உலக கோப்பை விளையாட்டுகளில் விளையாடி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான ஹன்னா என்ற பெண்ணை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம் மங்களூர் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை சட்டவிரோதமானதா?

அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது, சர்வதேச சட்டதின் அடிப்படையில் சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர். ஆஸ்திரேலியாவின் சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ வில்கிக்கு வழக்கறிஞர் அலுவலகம் எழுதிய கடிதத்தில், பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் உள்ள முகாம்களில் உடல் மற்றும் பாலியல் வன்முறை அவ்வப்போது நிகழக்கூடிய ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்விஷயங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும் வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்கான ‘சூழ்நிலைக் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வீதியில் திடீரென தீப்பற்றிய கார்: மூன்று குழந்தைகளுடன் தந்தை பலி!

அவுஸ்திரேலியாவில், பிரிஸ்பேன் நகரை அண்மித்த வீதியொன்றில் திடீரென காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை சுமார் ; 8.00 மணியளவிலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐந்து பேர் காருக்குள் இருந்துள்ள நிலையிலேயே குறித்தக் கார் தீப்பற்றியுள்ளது. இந்நிலையில் காருக்குள் இருந்த பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் காரை நோக்கி ஓடி சென்று காருக்குள்ளிருந்த குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அதன்போது, அவன் தான் என் மீது மண்ணெண்ணையை ஊற்றினான் என குறித்தப் பெண் கத்தியதாக அப்பெண்ணை மீட்டவர் தெரிவித்துள்ளார். மேலும், ...

Read More »

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: ஸ்டீவ் வாக் சொல்கிறார்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2020-21 டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு உள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19 டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்திருந்தது. இதற்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு போட்டியை டே-நைட் டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு இந்திய ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நம்பிக்கையிழந்த அகதி குடும்பம்: கனடாவில்……..!

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா அரசின் ஸ்பான்சர் முறையின் கீழ் அவர்களுக்கு அங்கு நிரந்தரமாக வசிக்க (Permanent Residency) இடமளிக்கப்பட்டுள்ளது. திமா அவரது கணவர் ஹனி மற்றும் அவர்களது குழந்தைக்கே இந்த புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. திமா எனும் பெண் குவைத்தில் பிறந்த நாடற்ற பாலஸ்தீனிய அகதி. அவரைப் போலவே நாடற்ற பாலஸ்தீனிய அகதியான ஹனியை ஈராக்கில் சந்தித்து அங்கிருந்து இருவரும் ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளனர். ஆஸ்திரேலியா ...

Read More »

சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்வோருக்கு மேலும் ஒருவாரத் தடை நீடிப்பு !

சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வெளிநாட்டினருக்கான தடை உத்தரவினை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி விதிக்கப்பட்ட இந்த 14 நாட்கள் தடையுத்தரவானது இன்றையதினம் நிறைவடையும் தறுவாயிலேயே, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வியட்நாமில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகையானது 16 ஆக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வைரஸின் பரவலை கட்டுப்படுத்த கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வியட்நாமின் பின் சூயென் மாவட்டத்தில் கம்யூனை சுற்றியுள்ள ஒரு பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இன்று ...

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழுவை வழி நடத்தும் தமிழ் விஞ்ஞானி !

அவுஸ்திரேலிய நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி தமிழர் வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த குழுவானது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தங்களின் முதல் ஆய்வில் வெற்றி பெற்று உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 720 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 34,394 பேர் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,826 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எகிறும் கொரோனா வைரஸ் பலியால் கலக்கமடைந்துள்ள பல நாடுகள் ...

Read More »