கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழுவை வழி நடத்தும் தமிழ் விஞ்ஞானி !

அவுஸ்திரேலிய நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி தமிழர் வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குழுவானது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தங்களின் முதல் ஆய்வில் வெற்றி பெற்று உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 720 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 34,394 பேர் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4,826 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எகிறும் கொரோனா வைரஸ் பலியால் கலக்கமடைந்துள்ள பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

அதில் அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க அவுஸ்திரேலியாவின் முன்னணி அறிவியல் நிறுவனமான ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது.