அவுஸ்திரேலியமுரசு

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைமுறைபடுத்தப்பட்ட விதிமுறைகளால் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அகதிகளுக்கு இணைப்பு வீசா என்ற பெயரில் வழங்கப்படுகின்ற தற்காலிக வீசாவின் ஊடாக அங்கு தொழில்புரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளை அவர்களைப் போன்ற அகதிகளுடனேயே பேண வேண்டிய நிலை காணப்படுகிறது. இதேவேளை, அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் இனரீதியாக பாகுபடுத்தப்பட்டு ...

Read More »

அவுஸ்ரேலியா பொழுதுப்போக்கு பூங்காவில் பயங்கர விபத்து

அவுஸ்ரேலியா நாட்டின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் உள்ள பிரபல தீம் பார்க்கில் நேற்று (25)  ஏற்பட்ட பயங்கர விபத்தில் நான்குபேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ’டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ’தன்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குகைகள் மற்றும் மரப்பாலங்களை கடந்து ஆறுபேர் அமர்ந்து செல்லும் பரிசல் சவாரி மிகவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படும்

2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்ரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால் இவை ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை இந்தவருட இறுதியில் அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவுத் திணைக்களத்தின் செயலாளர் Michael Pezzullo செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். அதில் முக்கியமாக பல தடவைகள் நாட்டுக்குள் வந்து போகும் வகையிலான 10 வருட சுற்றுலா விசாவும் அடங்குவதாக ...

Read More »

“உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி பேசு­கின்­றனர்’ – அவுஸ்திரேலிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் தேசிய கல்வித் திட்­டத்தில் தமிழ் மொழியை ஒரு பாட­மாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அந்­நாட்டின் நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஹு மெக்­டெர்மார்ட் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். புரொஸ்பெக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹுமெக்­டெர்மார்ட், தமிழ் மொழியை பாடத்­திட்­டத்தில் சேர்க்க வேண்டும் என நீண்­ட­கா­ல­மாக கோரி வரு­பவர். இந்­நி­லையில், நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் இது தொடர்­பான பிரே­ர­ணையை அவர் முன்­வைத்­துள்ளார். நாடா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பாக அவர் உரை­யாற்­று­கையில், “உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி ...

Read More »

‘பிக் பாஷ்’ சிட்னி தண்டர் அணியின் கப்டனாக வாட்சன் நியமனம்

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான சிட்னி தண்டர் அணியின் கப்டனாக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் வருடந்தோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அந்த அணியின் கப்டனாக மைக் ஹசி இருந்தார். தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, அந்த அணியின் டைரக்டராக மாறிவிட்டார். இதனால் கேப்டன் சிட்னி தண்டர் அணியி்ன் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதல் – ஒருவர் காயம்

அவுஸ்ரேலியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஆடவர், இன்று(24) அதிகாலை சுறா மீன் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டுள்ளது. சம்பவம் பிரபல அவுஸ்ரேலியச் சுற்றுலாத் தலமான Byron Bayக்கு அருகே உள்ள கடற்கரையில் நடந்ததாகத் தகவல்கள் கூறின. சிட்னி நகருக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது Byron Bay.  அந்தக் கடற்கரையில் ஒருவர் தமது பலகையுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார். சாதகமான அலை ஒன்றுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த வேளையில், அவருக்குக் கீழிருந்து சுறாமீன் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தாக்குதலின் பெரும்பகுதியை அவரது அலைச்சறுக்குப் பலகை தாங்கிக்கொண்டதால், ஆடவர் காலில் லேசான ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஐம்பது ஆண்டுகள் தாமதமாக வழங்கப்பட்ட தபால் அட்டை

ஐம்பது ஆண்டுகள் தாமதமாக அஞ்சல் அட்டை ஒன்றை டெலிவரி செய்த சம்பவத்துக்கு அவுஸ்ரேலிய தபால் துறை மன்னிப்பு கோரியுள்ளது. தெற்கு பசிபிக் தீவில் உள்ள டஹிடியில் இருந்து தெற்குஅவுஸ்ரேலியா வில் அடிலெய்டில் என்னும் இடத்திற்குக் கடந்த 1966-ல் அஞ்சல் அட்டை ஒன்று அனுப்பப்பட்டது. இந்த அஞ்சல் அட்டையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் ஆஸ்திரேலியா தபால் துறை உரியவரிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளது. அடிலெய்டில் உள்ள தபால் பெட்டி ஒன்றில் இந்த அஞ்சல் அட்டையைக் கண்ட டிம் டஃபி என்பவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ...

Read More »

அவுஸ்ரேலியாவின் அதானி நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி

அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் ரூ.1.50 கோடி மதிப்பில் செய்து வரும் நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை மையமாக கொண்ட அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்க உரிமைகளை எடுத்துள்ளனர். சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்த அமெரிக்காவை சேர்ந்த சாண்ட்லர் பவுண்டேசன் நிறுவனம் சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குழுவினருக்கு நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி ...

Read More »

அவுஸ்ரேலியாவின் நெருக்கடியான அட்டவணை

அவுஸ்ரேலியா அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிராக பிப்ரவரி 22-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் முக்கியமான அணி. அந்த அணி சில நேரங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கும். பொதுவாக இரண்டு தொடருக்கிடையில் சில நாட்களாவது இடைவெளி இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் நடைபெற இருக்கும் தொடருக்கிடையில் ஒருநாள் மட்டுமே இடைவெளி உள்ளதுபோல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை-அவுஸ்ரேலியா அணிகளுக்கு ...

Read More »

விக்டோரியா மாநில புலமைப் பரிசில்

விக்டோரியா மாநில அரசு RMIT பல்கலைக்கழகத்தினூடாக வழங்கவுள்ள புலமைப் பரிசில் குறித்த தகவல் இது. நீங்கள் தமிழ் மொழிபெயர்த்துரைப்பாளராக(Interpreter) பணிபுரிகிறீர்களா? அல்லது அதற்கான டிப்ளோமா பயிற்சி நெறியை மேற்கொள்கிறீர்களா? விக்டோரியா மாநில அரசு மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான புலமைப்பரிசிலை வழங்குகிறது. இப்புலமைப் பரிசில் குறித்த மேலதிக விபரங்களை http://multicultural.vic.gov.au/projects-and-initiatives/improving-language-services/interpreter-scholarships என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

Read More »