அவுஸ்திரேலியமுரசு

நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அவுஸ்ரேலியா அரசு பச்சைக்கொடி

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய ஒரு நிலக்கரி சுரங்க க் கட்டுமானத்தை மேற்கொள்ள இறுதி முதலீட்டு ஒப்புதலை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில், 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை,(12.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை அறிவிக்கும் விதமாக இந்த முடிவு உள்ளது என கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் முன்கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த சுரங்கத் திட்டம் முதலீட்டை உருவாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் ...

Read More »

குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை 1 முதல் சம்பள உயர்வு!

அவுஸ்ரேலியாவில் ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.3 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை 1 முதல் நாடுமுழுவதுமுள்ள 2.3 மில்லியன் பணியாளர்கள் வாரமொன்றுக்கு 22.20 டொலர்கள் கூடுதலாகப் பெறவுள்ளனர். இதுவரை காலமும் பணியாளர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு வழங்கவேண்டிய ஆகக்குறைந்த சம்பளமாக 17.70 டொலர்கள் காணப்பட்ட நிலையில், அது தற்போது 18.29 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் ஆகக்குறைந்த வாராந்த சம்பளம் 694.90 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைசெய்யும் hospitality, retail, pharmacy மற்றும் ...

Read More »

அவுஸ்ரேலிய காவல் துறையால் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணில், பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த ஆயுததாரியொருவரை,  நேற்று   (05) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த நபர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற மோதலில், மூன்று அதிகாரிகளை, குறித்த நபர் சுட்டிருந்தார். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர், ஆயுததாரி நடவடிக்கையில் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து அவுஸ்ரேலிய காவல் துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர். செல்வந்த கடற்கரையோர புறநகரான பிரைட்டனிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலேயே அதிகாரிகள் சுடப்பட்டதாகத் தெரிவித்தகாவல் துறை , துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்து இறந்தபடி வேறொரு நபரொருவர் மீட்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். அவசர சேவைகளுக்கு, ...

Read More »

கொதிக்கும் தண்ணீரால் உயிரிழந்த குழந்தை!

அவுஸ்திரேலியாவில் இரண்டு வயது மகளை கொதிக்கும் நீரில் குளிக்க வைத்த காரணத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Brisbane நகரை சேர்ந்தவர் Shane David Stokes (30) இவர் மனைவி Nicole Betty More (23). இவர்களுக்கு Maddilyn-Rose (2) என்னும் மகள் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் Maddilynயின் பெற்றோர் அவரை கொதிக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் குளிக்க வைத்துள்ளனர். இதில் சூடு தாங்காமல் திணறிய Maddilynக்கு கால், முதுகு என உடலில் பல இடங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ...

Read More »

திருமணத்திற்கு எந்த உடை அணியலாம்? – 93 வயதாகும் சில்வியா

அவுஸ்திரேலியாவில் 93 வயது மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு எந்த உடை அணியலாம் எனக் கேட்டு பதிவேற்றியுள்ள பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் குடியிருந்து வருபவர் 93 வயதாகும் சில்வியா. இவர் தற்போது தமது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து திருமண நாளில் எந்த உடை அணியலாம் என சில புகைப்படங்களை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளிடம் வினவியுள்ளார். 93 வயதாகும் சில்வியா 88 வயதாகும் பிராங்க் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். ...

Read More »

அவுஸ்ரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு

அவுஸ்ரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு இந்தியா ஏற்னவே இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், மறுப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்தப் பயிற்சியானது இந்துசமுத்திர கடல் பகுதியின் கிழக்கே பசுபிக் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அதிகமாக மது அருந்துவது யார் ?

அவுஸ்ரேலியாவில் மது அருந்துவது, போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபடுவது யார் என அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆய்வில் 12 முதல் 24 வயது வரையானோர் மிகக் குறைந்தளவே மது அருந்துகின்றனர் என்றும் அதேவேளை 50 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டோர் சுமார் இரு மடங்கு அதிகம் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்களைவிட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகம் மது அருந்துவதாக குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Read More »

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தகவல் பரிமாற்றம் + கேள்வி பதில்

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் கொண்டுவந்திருந்தது. இதுவரை விண்ணப்பிக்காத புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. இவை பற்றிப் பேசுவதற்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து விளக்கம் தரவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என சிட்னியின் பிரபல சட்ட ...

Read More »

அவுஸ்ரேலியா- சிறிலங்கா விமானச்சேவை அக்டோபர் 29ம் நாள் ஆரம்பம்!

கொழும்புக்கும் மெல்போர்ணுக்குமிடையில் நேரடி விமான சேவைக்கு ஏர்பஸ் A330-200 விமானங்ககளைப் பயன்படுத்தப் போகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் A330-200 களுடன் மெல்பேர்ண்-கொழும்பு விமான சேவையை அக்டோபர் மாதம் முதல் ஆரம்பித்த பின்னர், ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் நேரடியாகப் பயணிக்க முடியும். ஆஸ்திரேலியாவில் வாழும் அதிகப்படியான இலங்கையர்கள் விக்டோரிய மாநிலத்தில் வசிப்பதால், மெல்பேர்ணில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் நாள் சேவை ஆரம்பமாகிறது என்றும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கேப்டன் ...

Read More »

அவுஸ்ரேலியா சிறிலங்காவுக்கு 10 படகுகளை வழங்கியுள்ளது!

வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா 10 இறப்பர் படகுகளையும், வெளியிணைப்பு இயந்திரங்களையும் வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கன் விமானசேவை விமானத்தின்மூலம் இவ்வுதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்திற்கருகிலுள்ள ரங்கலை கடற்படைத் தளத்தில் வைத்து அவுஸ்ரேலியத் தூதுவர் பிறைஸ் ஹட்சிசனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. உடனடியாகவே இந்தப் படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

Read More »