அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தகவல் பரிமாற்றம் + கேள்வி பதில்

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் கொண்டுவந்திருந்தது. இதுவரை விண்ணப்பிக்காத புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. இவை பற்றிப் பேசுவதற்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த மாற்றங்கள் குறித்து விளக்கம் தரவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என சிட்னியின் பிரபல சட்ட அமைப்பு ஒன்றிலிருந்து குடிவரவு சட்டத்தரணி ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார். அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பாலா விக்னேஸ்வரனும் பங்குபற்றுகிறார். மேலும், புதுவரவாளர்களுக்கான தொழில் முயற்சிக் கடனுக்கான உதவிகளை வழங்கும் அமைப்பு ஒன்றின் நிறைவேற்று அதிபரும் கலந்துகொள்கிறார்.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் இம்மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தத் தகவல் மாலையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள்: 4 ஜூன் 2017 – (ஞாயிற்றுக் கிழமை)
நேரம்: பிற்பகல் 2:00 மணியிலிருந்து 4:00 மணி வரை
இடம்: பெண்டில் ஹில் தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள யாழ் மண்டபம்
மேலதிக தகவல்களுக்கு: 0419 361 273 (பாலா விக்னேஸ்வரன்) மற்றும் 0421 83 2255 (சுஜன் செல்வன்)

அகதிகளுக்கும்
புகலிடக் கோரிக்கையாளர்களுக்குமான
தகவல் மாலை

⇨ குடிவரவு மற்றும் சட்ட ஆலோசனைகள்
⇨ சுயதொழில் கடன் குறித்த ஆலோசனைகள்
⇨ கேள்வி – பதில்