குமரன்

திரையுலகில் விக்ரமின் 26 ஆண்டுகள்

தமிழ்த் திரையுலகில் நடிப்பிற்குகாக தன்னையே வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு நடிப்பால் பாராட்டப்படும் நடிகர்களில் விக்ரம் மட்டுமே முதன்மையானவராக இருக்கிறார். 1990ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த என் காதல் கண்மணி ; படத்தின் மூலம் நாயகனாக திரையுலகத்திற்கு அறிமுகானார் விக்ரம். அடுத்தடுத்து ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தும் விக்ரமால் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக உயர முடியவில்லை. 1999ம் ஆண்டு கடைசியில் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம் ...

Read More »

அவுஸ்ரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி

NSW மாநில, ப்ராஸ்பெக்ட் (Prospect) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (Hugh Mcdermott) ஹூ மெக்டெர்மாட், தேசிய பாடதிட்டத்தில் தமிழை உள்ளடக்குவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் அவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரையை நேரடியாகக் கேட்க விரும்புபவர்கள் அவரது பணிமனையை மின்னஞ்சலூடகவோ (prospect@parliament.nsw.gov.au) தொலைபேசியிலோ (02 9756 4766) தொடர்பு கொள்ளலாம்.

Read More »

மனிதர்களைத் தாங்கும் விண்கலத்தை விண்வெளியில் செலுத்திய சீனா

சீனா, அதிக காலம் மனிதர்களைத் தாங்கியிருக்கக்கூடிய விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்கலம் நேற்று ( காலை, கோபி (Gobi) பாலைவனத்தின் ஜிசுவான் (Ji-chuan) செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து இரு வீரர்களுடன் விண்ணை நோக்கிப் பாய்ந்தது. ஜிங் ஹைபெங்(Jing Haipeng ), சென் டோங். (Chen Dong)மனிதர்களோடு பாய்ச்சப்படும் தனது ஆறாவது விண்கலத்துக்குச் சீனா தேர்ந்தெடுத்த விண்வெளி வீரர்கள் இவர்கள். தமது 50ஆவது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடவிருக்கும் ஜிங்கிற்கு இது மூன்றாவது விண்வெளி அனுபவம். 38 வயது சென்னுக்கு முதன்முறை. ஷென்ஸோ (Shenzhou) 11 என்ற பெயர் ...

Read More »

தாய்லந்து-அவுஸ்ரேலியா காற்பந்து போட்டி சிங்கப்பூரில்

தாய்லந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜின் மறைவைத் தொடர்ந்து தாய்லந்து காற்பந்து சங்கம், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை காற்பந்து போட்டியின் தகுதி சுற்றை ஏற்று நடத்த சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கும் தாய்லந்துக்கும் இடையிலான காற்பந்து போட்டி நவம்பர் 15-ஆம் திகதி பேங்காக்கில் உள்ள ராஜமங்கலா அரங்கில் நடைபெற இருந்தது. ஆனால் மறைந்த மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்கே ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படுவதால் காற்பந்து போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் தகுதி சுற்றுக்கான போட்டி நடத்தப்படும் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் ...

Read More »

சிட்னியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

சிட்னி, Sir Thomas Mitchell Drive, Davidsonஇல் உள்ள வீட்டினுள்ளிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கொலம்பிய பின்னணி கொண்ட 44 வயதான ஆண், 43 வயதான பெண், 9 வயதுச் சிறுவன் மற்றும் 10 வயதுச் சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக The Daily Telegraph  செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நால்வருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து இவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் காவல்துறைக்கு அறிவித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை அந்த வீட்டிலிருந்த நாயும் உயிரிழந்து காணப்பட்டதாக ...

Read More »

‘என்னை சுட்டுக்கொல்ல போகின்றீர்களா?’ -சுமந்திரன்

நேற்று (16) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கு தெளிவுபடுத்த முற்றட்ட தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்றும் கூறினார். மக்கள் கேள்விகளை கேட்டபோது அதனை தடுப்பதற்காகவும் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதில் கலந்துகொண்ட சுமந்திரன் சர்வதேச ...

Read More »

கராத்தே யூரோப்பியன் சம்பியன் 2016ம் ஆண்டுக்கான போட்டி ஈழத்து சிறுமி இரண்டாம் இடம்

கராத்தே யூரோப்பியன் சம்பியன் 2016ம் ஆண்டுக்கான போட்டி இத்தாலி நாட்டில் 11/10/2016 தொடக்கம் 16/10/2016 வரை நடைபெற்றது. பத்து வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஈழத்து சிறுமி ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். இலண்டனில் வசிக்கும் சிவகுமார் அகல்யா என்பவர் ஆவார். சிறுமியை எமது இணையம் தொடர்பு கொண்டபோது தனக்கு கற்பித்த ஆசான்களாலும், பெற்றோர்களாலும் தனது விடாமுயற்சியான பயிற்சியாலும் கிடைத்த வெற்றியாக கூறியுள்ளார். இவருக்கு எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Read More »

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டிற்கான நிரந்தர குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள்

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டிற்கான நிரந்தர குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரவேற்றுள்ளது. குறித்த நிகழ்வுக்கான ஆன்லைன் பதிவானது இம்மாதம் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குறிப்பிட்ட நிகழ்வில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களை நிரந்தர குடியுரிமைக்கான நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இந்த ஆண்டு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களை அடுத்த ஆண்டு குறித்த நாளில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தெரிவாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் நிரந்த ...

Read More »

விமானங்களில் சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனுக்கு தடை

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனை யாரும் விமானங்களில் எடுத்து வரவும், எடுத்து செல்லவும் கூடாது என்ற உத்தரவு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், ‘சாம்சங் கேலக்சி நோட் 7’ என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த போன் தீப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன. இப்படி சுமார் 100 புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் பொருள் பாதுகாப்பு ஆணையம் கூறியது. பேட்டரிகள் அதிக சூடாவதின் காரணமாகத்தான் இந்த ஸ்மார்ட் போன்கள் வெடிப்பதாகவும், தீப்பிடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்படி தொடர்ந்து புகார்கள் ...

Read More »

சிவகார்த்திகேயன் அவுஸ்ரேலியா பயணம்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள், தடைகளுக்கு இடையே நல்ல வரவேற்புடனும், வசூலுடனும் ஒடிக் கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட வெளிநாட்டிலும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த தமிழ் படமும் பெற்றிராத வெற்றியை ரெமோ பெற்றிருக்கிறது. இதற்காக அங்குள்ள தமிழ் அமைப்புகள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ளுமாறு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று தற்போது சிவகார்த்திகேயன் அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளார். அவுஸ்ரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் மோகன் ...

Read More »