தாய்லந்து-அவுஸ்ரேலியா காற்பந்து போட்டி சிங்கப்பூரில்

தாய்லந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜின் மறைவைத் தொடர்ந்து தாய்லந்து காற்பந்து சங்கம், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை காற்பந்து போட்டியின் தகுதி சுற்றை ஏற்று நடத்த சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கும் தாய்லந்துக்கும் இடையிலான காற்பந்து போட்டி நவம்பர் 15-ஆம் திகதி பேங்காக்கில் உள்ள ராஜமங்கலா அரங்கில் நடைபெற இருந்தது.

ஆனால் மறைந்த மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்கே ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படுவதால் காற்பந்து போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் தகுதி சுற்றுக்கான போட்டி நடத்தப்படும் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தைத் தாய்லந்து காற்பந்து சங்கம் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது.