குமரன்

சவுதியில் மரங்களை வெட்டினால் தண்டனை என்ன?

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 30 மில்லியன் ரியால் ( இலங்கை மதிப்பில் சுமார் 148 கோடி ரூபா) அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாலைவன நாடான சவுதியில், சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக பசுமைத்திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் மாதத்துக்குள் நாடு முழுவதும் 1 கோடி மரங்களை நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், எடுத்துச் ...

Read More »

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரம்- ஐநா பிரதிநிதி மகிந்தவிற்கு கடிதம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கையின் சுகாதாரஅமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து ஐநா கரிசனை வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கரிசனையை வெளியிட்டுள்ளார். கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான தற்போதைய தடை வெகுவிரைவில் மறுஆய்விற்கு உட்படுத்தப்படலாம் என ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை நான் ஆர்வத்துடன் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழமைவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ...

Read More »

தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுக!

இம்முறை தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நீதியரசருமான க.வி.விக்கினேஸ்வரனும் அறிக்கை மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று ‘அன்பான உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் விடுத்த அறிக்கையில் கூறியவை வருமாறு:   ‘இம்முறை தீபாவளியை உங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள். மக்கள் பெருவாரியாகக் கூடுவதை நாங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், சலரோகம், உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களுடன் வாழ்பவர்கள், மற்றும் கர்ப்பவதிகளுக்கு ...

Read More »

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி பலி

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல் துறை  தெரிவித்துள்ளனர். கோயில் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உஜிதன் சாதுரியா (7 வயது) எனும் யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 2இல் கற்கும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி இந்தச் சிறுமி ஊஞ்சலாடுவதற்காக மரத்திலிருந்த ஊஞ்சல் கயிற்றை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார். இதன்போது கயிறு தவறுதலாக ...

Read More »

கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு

இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர். ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார். எனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானதால் தொடர்ந்தும் வேலை செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்ட ராஜ், வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய ...

Read More »

ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன?

அமெரிக்க தேர்தலிற்கு முன்னர் ஜோ பைடனிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிவித்த கட்டுரையொன்று மீண்டும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் ஜோ பைடனிற்கு இந்தியாவுடன் பூர்வீகத்தொடர்பொன்றுள்ளது.கமலா ஹாரிசிற்கு உள்ளதை போல. இருவரினதும்  பூர்வீகதொடர்புகள் சென்னையில் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 19ம் நூற்றாண்டின் போது வில்லியம் பைடன் கிறிஸ்டொபர் பைடன் சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பனிக்காக பணியாற்றியிருந்தனர்.இந்தியாவிற்கும் லண்டனிற்கும் இடையிலான கடினமான கடற்பயணத்தினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். வில்லியம் சிறுவயதிலேயே மரணித்த போதிலும்,கிறிஸ்டபர் பல கப்பல்களின் தலைமை மாலுமியாக பணியாற்றிய பின்னர் அவ்வேளை செல்வச்செழிப்பு ...

Read More »

யாழ். நகரில் பிரபல தனியார் ஹொட்டலுக்கு “சீல்” வைப்பு

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் இன்று பூட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திருமண விழாக்கள் நடத்துவதாயின் சுகாதாரப் பிரிவினரிடம் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் குறித்த ஹோட்டலில் அனுமதி பெறாது சுகாதார நடைமுறையைப் பேணாது பிரமாண்டமாக இன்று திருமண நிகழ்வை நடத்த அனுமதித்ததன் காரணமாக குறித்த ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கிளிநொச்சியில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் நிரோஜன் ருஷாந்தன் (8 வயது) என்ற சிறுவன் இன்று உயிரிழந்துள்ளான். தொடர் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி குறித்த சுவர் இடிந்து வீழ்ந்ததாகத் தெரியவருகிறது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர் பகுதியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்த போது அவன் மீது சுவர் விழுந்துள்ளது. பின் அயலவர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி  காவல் துறையினர்  ...

Read More »

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்ம மரணம்

ஒடிசா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் பாலங்கிர் மாவட்டத்தில் சன்ராபாடா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் புலு ஜானி (50). இவரது மனைவி ஜோதி (48). இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்து அவர்ககள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய ஒடிசா மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்னாகர் ...

Read More »

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா….

நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை. இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ...

Read More »