குமரன்

தலைநகரில் அகதிகளாக வாழும் மக்களின் அவலம்!

இலங்கையில் வாழும் மக்கள் மாத்திரமல்ல உலகத்தில் வாழும் மக்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது நில உரிமை மற்றும் வீட்டுப் பிரச்சினை. கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தையடுத்த பல மக்கள் அவர்களது சொந்த நிலங்கள் மற்றும்அவர்களின் வீடுகளை பறிகொடுத்து நடுத்தெருவில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 வருட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்த அகதிகள் இன்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதி முஸ்லிம் அகதிகள் கொழும்பு 15 மட்டக்குளி காக்கைதீவு பிரதேசத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். சுமார் முப்பது ...

Read More »

ஹேக் செய்யப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் டுவிட்டர் கணக்குகள்!

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப் பூர்வ டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமாக டுவிட்டர் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு மூலமாக ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கணக்குகள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்ததும், நாங்கள் குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்ததாகவும், எவ்வாறெனினும் அவற்றை மீட்டெடுக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து ...

Read More »

கால அவகாசம்: அடுத்தக் கட்டத்துக்கு நகரவும்!

ஐ.நா மனித உரிமைகள் சபையில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிறிலங்கா  விவகாரம் குறித்து, ஐ.நா அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமெனவும் ​கூறினார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோமென்று, புதிய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More »

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்ட அமெரிக்க தூதுவர்!

சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிரான பயண தடை குறித்த தனது அதிருப்தியை தெரிவிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தூதுவரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சந்திப்பார் எனவும் பயணதடை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழங்குகின்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

Read More »

யார் இந்த புதுக்கதையை எழுதியவர்?

யார் இந்த புதுக்கதையை எழுதியவர்? என்று தன்னைப் பற்றிப் பரவிய வதந்திக்கு நடிகர் ஆர்த்தி கிண்டல் செய்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்திலிருந்து விஜய் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதிலிருந்தே, வருமான வரி சோதனை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்தச் சோதனை ‘பிகில்’ படத்தின் செலவுகள், சம்பளம், வசூல் உள்ளிட்டவைக்காக நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சிலர் சமூக வலைதளத்தில் இந்தச் சோதனை என்பது கிறிஸ்தவக் குழுக்கள் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதால் நடத்தப்பட்டது என்று செய்திகளை வெளியிட்டார்கள். மேலும், அது தொடர்பான பணப் ...

Read More »

பிரான்சில் கொரோனா வைரஸ் நோயால் ஒருவர் மரணம்!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ; 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கூகுள் வரைபடத்தில் தெரியும் விவசாயியின் காதல்!

விளை நிலத்தில் தனது திருமண விருப்பத்தை தெரிவித்த ஜெர்மனி விவசாயியின் நிலம் கூகுள் வரைபடத்தில் முக்கிய இடமாக தெரியும் சம்பவம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹட்டென்பெர்க் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெஃபென் ஸ்வார்ஸ் (வயது 32). பகுதி நேர விவசாயியான இவர் தனது மனதை கவர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அந்த விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க வித்தியாசமான முயற்சியை கையாண்டார். தனது விளை நிலத்தில் என்னை திருமணம் செய்து கொள்வாயா என மிகப்பெரிய எழுத்துக்களை வரைந்து, அப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் விதை ...

Read More »

பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது!

சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

சிறிலங்கா இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடை!

சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா  இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ...

Read More »

யாழ். வரலாற்றைச் சொல்ல ஓர் அருங்காட்சியகம்!

நேற்றைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவும், நாளைய சமூகத்திற்குச் அதனைச் சொல்லவும் அருங்காட்சியகங்கள்  உதவுகின்றன. ஒரு நாட்டை அல்லது இனத்தின் வரலாற்றை  அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சார்ந்து  அமைக்கப் பட்டிருக்கும் அருங்காட்சியகத்துக்குள் போனாலே போதும் , அவர்கள் பற்றிய பலதை வாசித்தறிந்து கொள்ளலாம் என்கிறார் ஒரு வரலாற்றுப் பேராசிரியர்.  ஒரு நாட்டின் அதுவும் குறிப்பாக ஒரு இனத்தின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகங்களின் பணி மிகவும் முக்கியமானது. அதன் முக்கியத்துவத்தை  அறிந்தவர்களும், அதனை உணர்ந்தவர்களும் அது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த ...

Read More »