emurasu

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019

இலங்கைத்தீவில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வும், தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வும் சிட்னியில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.   கடந்த சனிக்கிழமை 18 – 05 – 2019 அன்று மாலை 6.30 மணிக்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிதர்சன் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை குமார் தம்பிராசா அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து தேசிய கொடியேற்றல் நிகழ்வு நடைபெற்றது.   அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்  லிங்கராசா சாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியகொடியை ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2019

இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சிங்களப் பேரினவாத சக்திகளால் இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களையும், அந்த இனவழிப்பின் உச்சமாக 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெரும் மனிதப் பேரவலத்தின்போதும் காவுகொள்ளப்பட்ட தமிழ் மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு, கடந்த 18-05-2019 சனிக்கிழமை மெல்பேர்ணில்; உணர்வுபூர்வமாக நடைபெற்றது.   மெல்பேர்ணில் அமையப் பெற்றுள்ள கங்கேரியன் சமூக மண்டபத்தில், மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிகா தலைமையில ஆரம்பமாகிய இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது, தனது இரண்டு பிள்ளைகளை இழந்து, பின்னர் ...

Read More »

நாட்டுப்பற்றாளர் நாள் – மெல்பேர்ண் 2019

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநிகழ்வு இவ்வாண்டும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 13 – 04 – 2019 அன்று மாலை ஆறுமணிக்கு பிறிஸ்ரன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூர்ந்தனர். தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் றகுலேஸ்வரன் கிருஸ்ணபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியகொடியை மூத்த செயற்பாட்டாளர் மகேந்திரன் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தயாபரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு குகந்தினி தயாபரன் அவர்கள் ...

Read More »

நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய நியுசிலாந்து பிரதிநிதிகளுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றிய அறிவித்தலை அவுஸ்திரேலிய நியுசிலாந்து நாடுகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுபற்றிய விபரங்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம். தேர்தல் ஊடக அறிக்கை ௦1 AUS Nomination Form TAMIL AUS Nomination Form ENGLISH   Key dates for the Election are: 10 March – Nominations Open 24 March – Nominations Close 25 March – Candidate list is announced 26 ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2019

வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் விளையாட்டுவிழா இவ்வாண்டும் அவுஸ்திரேலியா- மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கடந்த 06 -01 – 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு வேர்வூட் கிழக்குப் பகுதியில் உள்ள பிரதான திறந்தவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை செயற்பாட்டாளர் செல்வன் சஞ்சீவன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர் லெப் கேணல் சதன் அவர்களின் மகன் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து கேணல் கிட்டு உட்பட ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல திலீபன் அவர்களின் 31 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. கடந்த 28 – 09 – 2018 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிதா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மில்பார்க் தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் ...

Read More »

கட்டாய தடுப்புக்காவலில் உள்ள மூவர்: அவுஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்!

அவுஸ்திரேலியாவில் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான கட்டாயத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று புகலிடக்கோரிக்கையாளர்களது விடுதலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் “UN working group on arbitrary detention -சட்டத்துக்கு முரணான தடுப்புக்காவல்களை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு” இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் உள்ள தடுப்புக்காவல்களில் அந்நாட்டு அரசாங்கங்கள் இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் – நீண்ட காலமாக – தடுப்புக்காவலில் வைத்திருக்கும் 94 பேர் சம்பந்தப்பட்ட விடயங்களை ...

Read More »

பனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு! – UPDATED 3

ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை ...

Read More »

சிறந்த சமையலாளருக்கான போட்டியில் (Master Chef Australia) சசி செல்லையா வெற்றி!!

2018 ஆம் ஆண்டுக்கான ஆக சிங்கப்பூரில் பிறந்து தற்போது தென் அவுஸ்திரேலியாவில் வாழும் சசி செல்லையா வெற்றியடைந்துள்ளார். சிங்கப்பூரில் பிறந்த 39 வயதான சிவா அவுஸ்திரேலியாவுக்கு 2011 இல் குடி பெயர்ந்தார். தற்போது அடலெய்ட் நகரில் சிறை அதிகாரியாகப் பணியாற்றும் இவர் Master Chef Australia ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் முதற்தடவையாக 93 புள்ளிகளை அதிகூடிய புள்ளிகளாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

தேசிய கால்பந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனைகள் ஏழு பேர்!!

இலங்கையின் தேசிய 14 வயதுப் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனைகள் ஏழு பேர் இடம்பிடித்துள்ளனர். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் படசாலையைச் சேர்ந்த நால்வர், மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் என்றவாறாக அமைந்துள்ளது அந்தப் பிரதிநிதித்துவம். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ச.கிரிசாந்தினி, பா.சேந்தினி, அ.கொன்சிகா, க.பிருந்தாயினி ஆகியோரும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகியோருமே அவ்வாறு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணி எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய ...

Read More »