தேசிய கால்பந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனைகள் ஏழு பேர்!!

இலங்கையின் தேசிய 14 வயதுப் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனைகள் ஏழு பேர் இடம்பிடித்துள்ளனர். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் படசாலையைச் சேர்ந்த நால்வர், மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் என்றவாறாக அமைந்துள்ளது அந்தப் பிரதிநிதித்துவம்.

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ச.கிரிசாந்தினி, பா.சேந்தினி, அ.கொன்சிகா, க.பிருந்தாயினி ஆகியோரும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகியோருமே அவ்வாறு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த அணி எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ளது.