emurasu

மாவீரர் நாள் 2019 – பேர்த்

அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்திலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர். தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் மாவீரர் நினைவு சுமந்த நடன நிகழ்வு என்பனவும் நடைபெற்றுள்ளன. வழமையை விட இம்முறை அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மாவீரர் நாள் 2019 – குயின்ஸ்லாந்து

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Darra என்னும் இடத்தில் 27-11-2019 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. திரு அஜந்தன் நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. பொதுச்சுடரினை மருத்துவர் ராமலிங்கம் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி சசி, மூத்த சமூக செயற்பாட்டாளர் திருமதி கலா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்றினர். அவுஸ்ரேலியக் தேசியக்கொடியினை பொறியியலாளர் குணறாஜா அவர்கள் ஏற்றிவைக்க, பூர்வீக மக்கள் கொடியினை திரு பிறேமானந்தன் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசிய கொடியினை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ...

Read More »

எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2019 – சிட்னி

அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் மாவீரர் நாள் 2019 நிகழ்வு நவம்பர் 27ஆம் திகதி புதன்கிழமை உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. சிட்னி நகரின் புறநகர் ஒன்றின் திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் சிட்னி வாழ் உறவுகளைச் சேர்ந்த 230 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் படங்கள் மாதிரி கல்லறைகளில் வைக்கப்பட்டு அம்மாவீரர்களின் குடும்பங்ளைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடர்கள் ஏற்றி மலர்வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது மைதானம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு வாசலில் மாவீரர் நாள் வளைவு தமிழீழத்தில் ...

Read More »

கார்த்திகைப் பூச்சூடி மரநடுகைமாத மலர்க்கண்காட்சி!

வடக்கு மாகாண சபையின் பிரகடனத்துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (20.11.2019) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சி கார்த்திகைப் பூச்சூடி விருந்தினர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணியின் தலைவர் த.யுகேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம் மலர்க்கண்காட்சித் தொடக்க விழாவில் பிரதம விருந்தினராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா அவர்களும், கௌரவ விருந்தினராகத் ...

Read More »

மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல் – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மாவீரர்நாள் நிகழ்வு பற்றிய அறிவித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வழமைபோல, இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வை சிறப்பாக நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அறிவித்தலின் முழுவடிவம் வருமாறு: மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல் அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே, தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் ...

Read More »

தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – சிட்னி

தமிழ்மக்களின் சுதந்திர விடிவிற்காக நீரின்றி உணவின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் நினைவுநிகழ்வு, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை 26 – 09 -2019 அன்று மாலை 7.30 மணிக்கு வென்வேத்வில் றெட் வைறோன் சமூக மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.   இளம் செயற்பாட்டாளர் சிந்துஜன் ஞானமூர்த்தி நிகழ்வை தொகுத்து வழங்க, பொதுச்சுடரை லெப்ரினன்ற் கேணல் அக்பர் அவர்ளின் மூத்தமகன் பிறைக்குமரன் ஏற்றி நிகழ்வை தொடக்கிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கொடியை இளம் செயற்பாட்டாளர் நிலா ஏற்றிவைக்க, தமிழீழ தேசிய கொடியை ...

Read More »

தியாகி திலீபன் நினைவுநாள் செய்தியறிக்கை – மெல்பேர்ண் 2019

நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மெல்பேணில் கிளேன் வேவலி சென் கிறிஸ்தோபர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 – 09 – 2019 அன்று சிறப்பாக, உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இளைய செயற்பாட்டாளர் செல்வி மது பாலசண்முகன் நிகழ்வை தொகுத்து வழங்க மாலை 6 மணிக்கு நினைவு கூரல் நிகழ்வு ஆரம்பமானது. அவுஸ்திரேலிய தேசியகொடியை இளைய செயற்பாட்டாளர் யது பாலசண்முகன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியை இளைய செயற்பாட்டாளர் பவித்திரன் சிவநாதன் ஏற்றிவைத்தார். தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் ...

Read More »

தமிழ்க்குடும்பத்திற்கு ஆதரவாக தேசிய அளவில் கவனயீர்ப்பு நிகழ்வு!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த தமிழ்க்குடும்பத்தின் அகதிக்கோரிக்கையை நிராகரித்து சிறிலங்காவுக்கு நாடுகடத்த வெளியேற்ற முற்பட்டபோது நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் புதன்கிழமை வரை தடுக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இக்குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று மீளவும் சுதந்திரமாக வாழவிடுமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தனித்தனியே வெவ்வேறு படகுகளில் அவுஸ்திரேலியா வந்த பிரியா மற்றும் நடேஸ் ஆகியோர் தமது அகதி தஞ்சகோரிக்கையை முன்வைத்த சமூகத்தில் வாழ்ந்துவந்த நிலையில் திருமணமாகி குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்ந்துவந்தனர். இவர்களுக்கு தற்போது இரண்டு மற்றும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழர் விடுதலைக்கான தொடர் போராட்டம் ஆரம்பம்!!

அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக ...

Read More »

60 தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமைப்பாட்டு பிரகடனம்!!

முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பத்தாவது ஆண்டில், இன்று சனிக்கிழமை 18 – 05 – 2019 அறுபதிற்கும் மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமைப்பாட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆங்கில வடிவம்: On 18 May 2019, ten years since the Sri Lankan state’s genocide against the Tamil nation reached its peak, we stand in solidarity with our brethren in their quest for justice. We believe that an independent international ...

Read More »