Tag Archives: ஆசிரியர்தெரிவு

போக்குவரத்துக் கட்டுப்பாடு களைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் எதிராளிகளை ஒடுக்க முயல்கின்றது

போக்குவரத்து கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் எதிராளிகளை ஒடுக்க முயல்கின்றது என ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது. ஜேவிபியின் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எழக்கூடிய கடும் எதிர்ப்பையும் விமர்சனங் களையும் ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீடித்தது என டில்வின் சில்வா தெரிவித் துள்ளார். தனது குறைபாடுகளை மறைப்பதற்காக அரசாங்கம் போக்குவரத்துக் கட்டுப் பாடுகளைப் பயன்படுத்து கின்றது என அவர் தெரிவித் துள்ளார். ஆடைத் தொழிற்சாலைகள், அரச அலுவலகங்கள், சிறிய வர்த்தகங்கள், சில கடைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன ...

Read More »

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்தக்கூடாது – அதனை இழந்தால் பெரும் பாதிப்பு

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி இழக்கும் டொலரின் பெறுமதி 300 ருபாயாக அதிகரிக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்லுகையை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்காக 2017 இல் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார். இதனை ...

Read More »

தமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது

கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு ; தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்று தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27 ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையிலிருந்து 24 ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் ;கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி சென்றடைந்துள்ளனர். தூத்துக்குடிக்கு சென்ற 27 பேரும் மதுரையில் தங்கி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் எந்த தொழில் செய்வோர் அதிக ஊதியம் பெறுகின்றனர்?

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களின் பட்டியலை ATO-வரித்திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2018-19 காலப்பகுதியில் வரித்திணைக்களத்திற்கு வரி செலுத்திய பல்வேறு  தொழில்துறை சார்ந்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் அதிக வருமானமீட்டுபவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் முதலிடத்தில் காணப்படுகின்றனர். இரண்டாமிடத்தில் மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் தொழில்களில் முதல் பத்து இடங்களில் என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. Surgeon – $394,303 Anaesthetist – $386,065 Internal Medicine Specialist – $304,752 Financial ...

Read More »

இஸ்ரேலில் ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு

முந்தைய காலங்களில் டோவிட், சிசோரியா மற்றும் அப்போலினயா போன்ற நகரங்களில் முட்டை துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது அகழ்வாராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதனை மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என அகழ்வாராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர். இந்த முட்டையை கண்டெடுத்த அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒருவர் இதுபற்றி கூறுகையில், “முந்தைய காலங்களில் டோவிட், சிசோரியா ...

Read More »

‘அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு பிரியா குடும்பம் தகுதிபெறவில்லை’

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்துவரும் பிரியா-நடேஸ் குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ், அகதி ஒருவர் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட வேண்டுமெனில் அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்க வேண்டுமெனவும், பிரியா குடும்பம் அகதிகள் என ஆஸ்திரேலிய அராசால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் Karen Andrews கூறியுள்ளார். முன்னதாக 2GB-க்கு வழங்கிய நேர்காணலில் பிரியா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது ...

Read More »

வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: அடிலெய்ட் முன்னிலை! மெல்பன், சிட்னி பின்னடைவு!!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தின் Auckland நகரமும் இரண்டாம் இடத்தை ஜப்பானின் Osaka நகரமும் மூன்றாமிடத்தை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும் பிடித்துள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னிலையில் இருந்த மெல்பன் தற்போது எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து 2021ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளது ...

Read More »

2021ம் ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம்

சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்திருந்தது. சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு வளையம் போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரிவதையே கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அந்தவகையில் வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ...

Read More »

ஜஹ்ரானுடன் தொடர்பு- தபாலதிபர் கைது

ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புவைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பதில் த ஒருவரும் இன்னொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹடகஸ்திகிலியவில் தபால் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். 2018இல் ஜஹ்ரான் ஹாசிமிற்கும் வேறு நால்வருக்கும் அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு சிறையிலிருந்த நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 35 வயது சந்தேகநபர் ஜஹ்ரன் ஹாசிமுடன் நெருஙகிய தொடர்புகளை பேணினார் என காவல் துறை ...

Read More »

மட்டக்களப்பில் ஒருவருக்கு யுகே பி.117 அல்பா வைரஸ்

மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரிசோதிப்பதற்காக நோயாளியில் எடுக்கப்பட்ட மாதிரியை போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வு கூடத்தில் பரிசோதித்தவேளை வீரியம் கூடிய யுகே பி.117 அல்பா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்; பி. தேவகாந்தன் தெரிவித்தார் இந்த புதிய வைரஸ் தொற்று தொடர்பாக நுண்உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்; பி. தேவகாந்தனை இன்று வியாழக்கிழமை (10) தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் கடந்த மே மாதம் நடுப்பகுதியளவில்தொற்றுக்குள்ளாகிய நோயாளியின் மாதிரியை பரிசோதிக்கும் போதுதான் இந்த ...

Read More »