Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை… இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த சூழலை மாற்றி “இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் ...

Read More »

பொருத்து வீடு வேண்டாம்! கிளிநொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பொதுமக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்’, ‘விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே’, ‘குசினியில்லா வீடெதற்கு’, போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி!

சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பெப்ரவரி மாதத்துடன், சிறிலங்கா கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். இதன் பின்னர், அவர் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ...

Read More »

முன்னாள் போராளிகள் மூவர் விடுதலை!

பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்த முன்னாள் போராளிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இம்மூவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் 200 பேருக்கு நேற்றைய தினம் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர் நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியாலயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ...

Read More »

கே.பியை கைது செய்ய உத்தரவில்லை – கொழும்பு நீதிமன்றம்

விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மழல்கொட இதனை தெரிவித்தார். ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு நபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியுமென்று கூறிய நீதிபதி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் ...

Read More »

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது.

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தற்போது தெற்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் கடற்படை தளபதியினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.ஊடக அமையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலையே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது ,வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது தென்னிலங்கைக்கும் ...

Read More »

நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்

எம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 69ஆவது அமர்வு இன்று(14) காலை 9.30 மணியளவில் மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் இடம்பெற்றதுடன் 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது வரவு செலவுத்திட்டத்தினை இந்த சபைமுன் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாச்சார விழுமியங்களை ...

Read More »

எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை

இந்த நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இனி வரும் தினங்களில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சம்பூர்- நாவலடி பிரதான வீதிப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று(13) மக்களிடம் அதனைக் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச் சந்தியில் இடம்பெற்ற வேளை அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ...

Read More »

எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும்

எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும். சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு, கிழக்கு மக்களின் விரிந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதில் முதலமைச்சரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சரின் உரையை வாசித்துள்ளார். அந்த உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சர்வோதய சபைகள் கூடி தேசிய நல்லிணக்கத்தினை தேடி தரும் சந்தர்ப்பம் இது. உங்கள் கலந்துரையாடல்களின்பொழுது சில ...

Read More »

போருக்குப் பின்னர் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன! பத்மினி சிதம்பரநாதன்

போருக்குப் பிந்திய காலத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்குள் ஆட்பட்டதுடன் அவர்களுக்கெதிரான வன்முறைகளானது தற்போதுவரை பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே அத்தகைய வன்முறைகளை முற்றாக ஒழிக்க சமூக ஒத்துழைப்புடன் தனிநபர் ஒத்துழைப்பு என்பன மிகவும் அவசியமானதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் விவகாரக் குழுத் தலைவியுமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை தினமாகிய இன்று பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் 16 ஆவது நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இது ...

Read More »