Tag Archives: ஆசிரியர்தெரிவு

என்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏரி கேலா எனும் பெண் உளவியலாளர், தன்னிடம் ஒரு வித்தியாசமான சக்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 24 வயதே ஆன இவர் தற்போது உளவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கூறும் போது தன்னால் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்பதை, முன்கூட்டியே கணிக்க முடியும் என கூறுகிறார். அவரது கணிப்பு பலமுறை அப்படியே நடந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கும் கேலா, முதல் முறையாக இந்த விஷயத்தை கண்டுவிடித்தது, தனது 12வது வயதில் தானாம். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்ற கேலா ...

Read More »

நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன்! – சோனம் கபூர்

இந்தி திரை உலக வாரிசு நட்சத்திரங்களில் பிரபலமானவர், சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் புதல்வியான சோனம், வாரிசு என்பதாக அல்லாமல், தனது சொந்தத் திறமையால் நற்பெயர் பெற்றிருக்கிறார். இந்தித் திரையுலகம் உங்களை எப்படி கவர்ந்தது? நான் கலகலப்பாக பேசக்கூடியவள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்தவும், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவுமே நான் விரும்பினேன். நூலகத்தில் இருக்கவும், வகுப்பறையில் இருக்கவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆக, நான் வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்குள்ளே இன்னொருபுறத்தில், ஏதாவது ஒரு கலை ...

Read More »

இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிக்கு தன்னார்வ தொண்டு நிறுவன பெண் மருத்துவர் பலி!

இஸ்ரேல் பாலத்தீன எல்லையில் நடந்துவரும் மோதலின் போது இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச சென்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 21 வயதான பெண் தன்னார்வலரான ரஸன் அல்-நஜார் (Razan al-Najjar, ) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தநிலையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More »

ஜூன் 03: அவுஸ்திரேலியாவில் மாபோ நாள்!

மாபோ எதிர் குயின்ஸ்லாந்து (Mabo v Queensland) என்பது அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டது. தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த அவுஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி ...

Read More »

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜி.எல் பீரிஸ்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய பசில் ராஜபக்ச சமல் ராஜபக்ச ஆகியோர் தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ...

Read More »

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும்! – கலாநிதி தீபிகா உடகம

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார். குறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.எனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வதேச மனித உரிமைகள் ...

Read More »

திட்டமிட்டு பறி போகும் முல்­லைத்­தீவு!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ ருள் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் கூறு­கின்­றனர். தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­துக்கு என்று அடை­யா­ளப்­ப­டுத்­தும் நடு­கல் அங்கு நேற்று முன்­தி­னம் நடப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் அத்­து­மீறி தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வாடி அமைத்து காணி­களை அப­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஒரு­பு­றத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற பெய­ரில் தமிழ் மக்­க­ளின் ...

Read More »

ஆஸ்திரேலியா – இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கை!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள திமோர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பு, மற்றும பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் ஆட்கடத்தல் உள்ளிட்ட செயல்களைக் கண்காணிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய எல்லைப் படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, இந்தோனேசிய கடல் மற்றும் மீன்பிடி விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் உள்ளடங்கிய முத்தரப்பு ரோந்து நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகின்றது. ஆப்ரேஷன் கன்னெட் (Operation Gannet) என அழைக்கப்படும் இந்நடவடிக்கையில் ரோந்து படகுகள்/ கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதே ...

Read More »

சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்! -கிருத்திகா உதயநிதி

‘என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்’ எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி. ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய இரண்டாவது படம் ‘காளி’ சமீபத்தில் வெளியானது. இயக்குநராக இருந்தாலும், திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமும் அவருக்கு இருக்கிறது. அவருடைய கணவரான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர், ஹீரோவாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மேடைகளில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். ‘அரசியலில் எந்த அளவுக்கு உங்கள் கணவருக்கு உதவியாக இருப்பீர்கள்?’ என்று கிருத்திகாவிடம் கேட்ட போது  “நான் அவருக்குச் செய்யும் ...

Read More »

ஆனந்த சுதாகரனின் மனைவியை கொன்றது அரச பயங்கரவாதமே!

பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ...

Read More »