பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜி.எல் பீரிஸ்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய பசில் ராஜபக்ச சமல் ராஜபக்ச ஆகியோர் தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிசை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த மகிந்த ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.