ஜூன் 03: அவுஸ்திரேலியாவில் மாபோ நாள்!

மாபோ எதிர் குயின்ஸ்லாந்து (Mabo v Queensland) என்பது அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும்.

1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டது.

தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த அவுஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.

இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி தீவுகளைச் சேர்ந்த மீரியாம் பழங்குடிகள் வழக்கு தொடுத்திருந்தனர்.

எடி மாபோ மற்றும் டேவிட் பாசி, ஜேம்ஸ் ரைஸ் ஆகியோர் 1982 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.