இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிக்கு தன்னார்வ தொண்டு நிறுவன பெண் மருத்துவர் பலி!

இஸ்ரேல் பாலத்தீன எல்லையில் நடந்துவரும் மோதலின் போது இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச சென்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 21 வயதான பெண் தன்னார்வலரான ரஸன் அல்-நஜார் (Razan al-Najjar, ) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தநிலையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.