Tag Archives: ஆசிரியர்தெரிவு

பத்திரிகை அலுவலகத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவர் கைது!

அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை காவல் துறையினர்  கைது செய்தனர். அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அன்னாகாவல் துறை நகரில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அங்கு ஒரு மர்ம வாலிபர் புகுந்தார். செய்தி அறை பகுதிக்குள் நுழைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்த ஊழியர்கள் உயிர் பிழைக்க ...

Read More »

கதாநாயகியான திருநங்கை அஞ்சலி!

ராம் இயக்கத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்து தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலி அமீர் என்ற திருநங்கை கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அஞ்சலி அமீர் கேரளாவை சேர்ந்தவர். மம்முட்டி பரிந்துரையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே மோகன்லாலுடன் ஸ்வர்ணபுரு‌ஷன் என்ற மலையாள படத்தில் அஞ்சலி அமீர் நடித்துள்ளார். அந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. பேரன்பு படம் முடிந்து உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. கதாநாயகியானது குறித்து திருநங்கை அஞ்சலி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதில் மேலும் சிக்கல் நிலை!

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் points system இல் மாற்றம் ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதன்மூலம் 60 புள்ளிகள் பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட நபர் ஒருவர் பல துறைகளில் Skilled Migration ஊடாக அவுஸ்திரேலியாவில் குடியேற முடியும். இந்த நிலையில் இம்முறைமையானது எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகதியிலிருந்து இது 65 புள்ளிகளாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 30 ஆம் திகதி ...

Read More »

பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் கைது! -ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

அண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். நேற்று (28)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார். இராணுவத்தின் ...

Read More »

செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தீ கேப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ...

Read More »

“நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்பு போதுமே!” – தொகுப்பாளர் மமதி சாரி

அழகுத் தமிழ். தனித்துவ தேன் குரல். புன்னகைச் சிரிப்பு… என்று தனித்துவ அடையாளங்களுடன் மிளிர்பவர், மமதி சாரி. தொலைக்காட்சி தொகுப்பாளராக கலக்கியவர், சின்ன இடைவெளி எடுத்து அமைதியானார். தற்போது, சன் டிவி ‘வாணி ராணி’ சீரியலில் திடீர் வரவாக வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இவருடன் உரையாடத் தொடங்கிய சில விநாடிகளிலேயே நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம். “திடீரெனப் பெரிய இடைவெளி ஏற்படக் காரணம் என்ன?” “சன் டிவி ‘செல்லமே செல்லம்’தான் தொகுப்பாளராக என் கடைசி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி 2015-ம் ஆண்டு முடிஞ்சது. மூணு வருஷமாச்சு. இந்த இடைப்பட்ட ...

Read More »

முதல்முறையாக நடைபெறவுள்ள டிரம்ப் – புதின் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதிபர் புதின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் ...

Read More »

குடியுரிமை விண்ணப்பத்தொகை மாற்றத்தில் அவுஸ்திரேலிய அரசின் திட்டம் தோற்கடிப்பு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பத் தொகையில் சலுகையை ரத்துச் செய்யும் அரசின் தீர்மானம் மீளப்பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புலம்பெயர் பின்னணி கொண்ட முதியவர்கள் மற்றும் சென்டர்லிங்க் கொடுப்பனவு பெறும் முன்னாள் வீரர்கள், கணவனை இழந்தவர்கள் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குடியுரிமை விண்ணப்பத் தொகையில் சலுகைகள் ரத்தாகிறது. சாதாரணமாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் சுமார் 285 டொலர்களை அதற்கான விண்ணப்பத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் கணவனை இழந்த கைம்பெண்கள் வெறுமனே 20 அல்லது 40 டொலர்கள் மட்டுமே ...

Read More »

சந்தியாவிற்கு மரணஅச்சுறுத்தல்- மன்னிப்புச்சபை கவலை!

சந்தியா எக்னலிகொடவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுப்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் பலவந்தமாக காணாமல்போனவர்களிற்காக குரல்கொடுப்பவருமான சந்தியா சமூக ஊடகங்களில் மரணஅச்சுறுத்தல்களையும்,துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சந்தியா எக்னலிகொட எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் கடும்கவலையளிக்கின்றன என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி  இயக்குநர் தினுசிகா திசநாயக்க அவரிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர்கள் தங்கள் ...

Read More »

போகுமிடமெல்லாம் தானே வரும் சூட்கேஸ்!

கொஞ்சம் செயற்கை நுண்ணறிவு, சக்திவாய்ந்த சில்லு, இரண்டு மோட்டார் சக்கரங்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிடைப்பதுதான், ‘ஓவிஸ்’ சீனாவைச் சேர்ந்த, பார்வர்டு எக்ஸ் ரோபாடிக்ஸ் தயாரித்துள்ள ஓவிஸ், ஒரு புத்திசாலி சூட்கேஸ்! அது தன் உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ளும் கேமிரா வசதியுடன் இருப்பதால், வேறு யாரும் அதை ‘கையாள’ முடியாது. உரிமையாளர் எங்கு சென்றாலும், அவரது வலது பக்கமாக கூடவே வரும் விசுவாசம் கொண்டது ஓவிஸ். படிகள், தடைகள் வந்தாலோ, பேட்டரி தீர்ந்து போனாலோ, உரிமையாளர் அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துச் செல்லலாம். ஓவிஸ் தானாக ...

Read More »