Tag Archives: ஆசிரியர்தெரிவு

இமெயிலில் இமோஜிகள் தேவையா?

மின்னஞ்சல் பயன்பாட்டுக்கெனத் தவிர்க்க முடியாத விதிகளும் எழுதப்படாத விதிகளும் நிறைய இருக்கின்றன. அதிலும் அலுவல்ரீதியான பரிவர்த்தனை எனில், மின்னஞ்சல் விதிகளைத் தவறாமல் பின்பற்றுவது நல்லது. மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படுத்துவது, ஆச்சரியக்குறிகளை அதிகம் பயன்படுத்துவது, ஒற்றை வரியில் பதில் அளிப்பது, உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான தலைப்பிடாமல் இருப்பது, ‘ரிப்ளை ஆல்’ வசதி மூலம் எல்லோருக்கும் பதில் அளிப்பது உள்ளிட்டவை மின்னஞ்சல் பயன்பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள். இதேபோல, இரண்டு இணைப்புகளுக்கு மேல் அனுப்புவது, தனியே குறிப்பு இல்லாமல் அளவில் பெரிய கோப்புகளை இணைப்பாக அனுப்புவதும் மின்னஞ்சல் தவறுகளே. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக காத்திருக்க வேண்டிய காலம்….!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள ஒருவர் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துச் செல்கிறது. இதுகுறித்து குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலன் டட்ஜ் (Alan Tudge) விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் தற்போது 14-17 மாதத்திற்குள் பரிசீலிக்கப்படுகிறது என கூறியுள்ளார். பரிசீலனை செய்வதற்கு காலதாமதமாவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 01. குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 2010 முதல் 2018 வரையில் மூன்று மடங்காகியுள்ளது. 02. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் கடுமையான பாதுகாப்பு விதிகளின் ...

Read More »

கிளைமோர் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது!

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று ...

Read More »

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப்

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். கிம் எழுதிய கடிதத்தை (ஜூலை ஆறு தேதியிட்டது) வெளியிட்டுள்ள டிரம்ப் ”மிகவும் அருமையான குறிப்பு இது ” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த வரலாற்று உச்சிமாநாட்டில் இரு நாட்டுத்தலைவர்களும் விவாதித்தவற்றில் அடிப்படை விஷயமான, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கம் ...

Read More »

புத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் – சம்பந்தன்

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை அடைந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போதே எதிரக்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இருவருக்கும் இடையில் ...

Read More »

வைரமுத்துவை வாழ்த்துவோம்! – இன்று வைரமுத்து பிறந்தநாள்!

திறமை இருந்தால் ஜெயிக்கலாம். ஆனால் திறமை மட்டுமே போதுமா என்ன? உழைப்பும் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் வெற்றிக்கு மிக மிக அவசியம். உழைத்தால் ஜெயிக்கலாம் என்பதற்கான உதாரணங்களில் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. உழைப்பு, ஜெயித்தல் என்றெல்லாம் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் வடுகப்பட்டிக்காரரின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சொல்லவேண்டும். சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். அதிலும் புதுமையாகவும் நளினமாகவும் சொல்லவேண்டும். இந்தப் பாட்டரசன் வைரமுத்துவின் பேனா, நவீன மையால் நிரப்பப்பட்டு நிரப்பப்பட்டு, காலி செய்யப்பட்டு, நிரப்பிக்கொண்டே இருக்கிற உழைப்புத் தேனி அவருடையது! ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர முடியுமா? என்று  இந்தியாவுடன் அடைந்த தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் நாங்கள் மீண்டும் நாங்கள் விளையாட முடியுமா என்ற தொனியில் மைக்கேல் வாகன் இந்தப் பதிவையிட்டிருக்கிறார். நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் 6 விக்கெட்டுகளில் 268 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோட் ...

Read More »

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை திரட்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினர் சேகரித்து வருகின்றனர். மருத்துவமனைகள் , வீடுகளில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தகவல் சேகரிப்பதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை. அது தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவரங்கனிடம் கேட்ட போது, குறித்த விபரங்களை தருமாறு எமது அமைச்சிடம் கோரி இருந்தார்கள். அதனை வழங்க எமக்கு அனுமதியில்லை. அது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு ...

Read More »

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த அண்ணன்!

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றுவதற்காக சகோதரன் தனது உயிரை பணயம் வைத்து இறந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஜோன் எட்வேட்ஸ் என்ற நபர் தனது மகனையும் மகளையும் சுட்டுக்கொன்ற சம்பவம் சிட்னியில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 15 வயது ஜக் எட்வேட்ஸ் தனது தந்தையின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து சகோதரியை காப்பற்றுவதற்காக உயிர்விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. தந்தை துப்பாக்கியுடன் தாயின் வீட்டிற்கு வந்த வேளை சிறுவன் தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான். ...

Read More »

தனிகட்சி தொடங்கும் எண்ணமில்லை!- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட  சிறிலங்காவிற்கான  கனடா தூதுவர் டேவிட் மைக்கனுடான சந்திப்பின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது கட்சி என்னை நியமிக்காவிடின் வீட்டிற்கு செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணைவேன், இல்லாவிடில் ஒரு கட்சியை அமைக்க முடியும் என நான் தெரிவித்திருந்ததில் மூன்றாவது விடயத்தை மாத்திரம் ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸை மனச்சாட்சியுடன் செயற்பட அனுமதித்துள்ளனரா என்பது ...

Read More »