Tag Archives: ஆசிரியர்தெரிவு

அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி 5 வயது சிறுவன்!

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன், உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ...

Read More »

மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் தொடர்கின்றது!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இன்று(18) காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் மேலும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ...

Read More »

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட தீலிபன்!

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை ...

Read More »

இன்று 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியது!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற 18 பேர் தனி விமானம் மூலம் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுடன் அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். A-319 எயார் பஸ் மூலம் 160 பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றிலேயே குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய ...

Read More »

குறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்

தருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில் தக்காளி செடிவைத்து அதிக மகசூல் எடுத்து வரும் பட்டதாரி இளைஞர்கள். தருமபுரி மாவட்டம் பாலக்கொடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி ராஜதுரை. இவர் ஆஸ்திரேலியாவில் பண்ணை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது கிராமத்தில் விவசாயத்தை தொடங்கலாம் என நினைத்து தனது தம்பிகளான சோலைராஜன், புவனேஸ்வரன், சூர்யாபிரகாஷ் ஆகிய இளைஞர்கள ஒருங்கிணைத்து நச்சுத்தன்மை இல்லாமால், இயற்கை முறையிலும், அதிக மகசூல் பெறும் வழியினை மேற்கொள்ள ...

Read More »

நடிகராக அறிமுகமாகும் இசையமைப்பாளர்!

மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் கோபி சுந்தர், நடிகராக அறிமுகமாகிறார். ‘உஸ்தாத் ஹோட்டல்’,‘5 சுந்தரிகள்’, ‘ரிங் மாஸ்டர்’, ‘ஹெவ் ஓல்டு ஆர் யூ’,‘பெங்களூரு டேஸ்’,‘சார்லி’,‘புலிமுருகன்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் கோபி சுந்தர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் நாயகனாக அறிமுகமாகும் காலமிது. அதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் கோபி சுந்தர். ஹரி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘டோல் கேட்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இதில் இவரோடு நடிக்கவிருப்பவர்கள் தேர்வு ...

Read More »

பாகிஸ்தான் சிறையில் சலுகைகளை மறுத்தார் நவாஸின் மகள்!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார். லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் திகதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் சிறப்பு வசதிகளை கோரி நவாஸ் ஷெரீப் ...

Read More »

டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராயும் விசேட அமர்வில் முதலமைச்சர் கொள்ளவில்லை!

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபையின் இன்றைய சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வட மாகாண சபையின் 127 வது அமர்வின் விசேட அமர்வு இன்று யாழ். கைதடியில் உள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. கடந்த யூலை 10ம் திகதி வடக்கு மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் ...

Read More »

மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்!- செந்தில் கணேஷ்

‘மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்’ என ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டம் வென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் பட்டத்தை வென்றுள்ளார். ஸ்ரீகாந்த், அனிருத், மாளவிகா, ஷக்தி, ரக்‌ஷிதா, செந்தில் கணேஷ் என 6 போர் பங்குகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பரிசை செந்தில் கணேஷும், இரண்டாவது பரிசை ரக்‌ஷிதாவும், மூன்றாவது பரிசை மாளவிகாவும் பெற்றுள்ளனர். ...

Read More »

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாங்களை அகற்ற முடியாது!-இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ...

Read More »